Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்; ஒரே வார்டில் அக்கா தங்கை மோதல்!  

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

Local elections; Conflict with sister in the same ward!

 

உயிருக்குயிராய் பழகி தோள்மேல் கை போட்டுக் கொண்டு நகமும் சதையுமாக இருந்தவர்கள் பகையாளிகளாக உறுமி நிற்பதும். காழ்ப்புணர்ச்சியில் வெட்டுக் குத்து வரை போனது. தேர்தல் பகைமையால் ஊரே பாதிக்கப்பட்டது போன்ற நிகழ்வுகளையும் வெளிக்கொண்டு வந்த உள்ளாட்சித் தேர்தல் தற்போது சராசரி குடும்பத்தில் புகுந்த அரசியல் ஒரே குடும்பத்தின் வீட்டிலிருக்கும் அக்கா, தங்கையையும் ஒரே வார்டில் எதிர் எதிர் அணியில் மோதவிட்டிருக்கிறது. அதோடு அவர் நிறைமாத கர்ப்பிணியும் கூட.

 

தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டமன்றத்தின் உறுப்பினர் பதவி அ.தி.மு.க.வசம் போய்விட்டது. தனது கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. பதவியை இழந்ததால், தி.மு.க. இம்முறை கடையநல்லூர் நகராட்சியைத் தன்வசமாக்கத் தீவிரக் களத்திலிருக்கிறது. முன்பு அ.தி.மு.க.வின் கூட்டணியில் இருந்த பா.ஜ.க. தற்போது தனியாக நிற்கிறது.

 

கடையநல்லூரின் 1வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. சுயேட்சைகள் என்று 10 பேர் மோதுகின்றனர். பெண்களுக்கானது என ஒதுக்கப்பட்ட இந்த வார்டின் பாலீஸ்வரன் பா.ஜ.க.வின் மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவராக இருப்பவர். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அதில் தனது மனைவியான ரேவதி பாலீஸ்வரனை பா.ஜ.க.வின் வேட்பாளராக்கிவிட்டார்.

 

இதே குடும்பத்தின் பாலீஸ்வரனின் அண்ணன் ஈஸ்வரன் அடிப்படையிலிருந்தே தி.மு.க.விலிருப்பவர். தன் தம்பி மனைவி பா.ஜ.க. வேட்பாளரானதால், குடும்பத்தார் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிய ரேவதி பாலீஸ்வரனை தன் கணவனின் அண்ணனும் மச்சானுமான ஈஸ்வரனும் வெற்றி பெறுவாய் வாழ்த்துக்கள் என்று ஆசிர்வதித்திருக்கிறார். உடன் அவரது மனைவியும், ரேவதி பாலீஸ்வரனின் அக்காவுமான மகாலட்சுமியும் ஆசிர்வதித்து அட்சதையைப் போட்டிருக்கிறார்கள்.

 

குடும்பத்தார்களின் வாழ்த்து ஜோரிலேயே ரேவதி பாலீஸ்வரன் உறவினர்கள் வார்டு புள்ளிகளோடு சென்று வேட்புமனுவும் தாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்தே அந்தத் திருப்பம் அரசியல் வழியாக விளையாடியிருக்கிறது. 1வது வார்டின் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கனிமொழி என்பவரால் கட்சியின் நிபந்தனைப்படி, ஐந்து லட்சம் தேர்தல் செலவிற்கானதைக் கட்டமுடியாமல் போனதால், அந்த வார்டில் ஆரோக்கியமான நிலையிலிருந்த பா.ஜ.க. வேட்பாளர் ரேவதி பாலீஸ்வரனின் அக்காவும், அவரது மச்சான் ஈஸ்வரனின் மனைவியுமான மகாலட்சுமியை வேட்பாளராக்கியிருக்கிறார் தி.மு.க. மா.செ.செல்லத்துரை.

 

Local elections; Conflict with sister in the same ward!

 

ஒரே வீட்டிலேயே ஒரே வார்டில் தாமரையில் தங்கை, அக்கா சூரியனில் என்ற அரசியல் மோதலும், சவாலும் எப்படியிருக்கும். உள்ளுக்குள் நெருடல் என்றாலும் அதனை இரண்டு உறவுகளுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

 

இதில் உற்றுக் கவனிக்கப்பட இன்னொரு முக்கியமான காரியம் ஒன்று. இந்தக் குடும்ப எதிர் வேட்பாளர்களில் பா.ஜ.க.வின் ரேவதி பாலீஸ்வரனுக்கு இரண்டு பிள்ளைகளிருந்தாலும் தற்போது மூன்றாம் முறையாகக் கர்ப்பமாகியிருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியான ரேவதி பாலீஸ்வரனுக்கு பிப்.17ம் தேதியன்று பிரசவமாகும் என்று மருத்துவர்கள் நாள் குறித்திருக்கிறார்களாம். பிப்.19ம் தேதி தேர்தலுக்கு முன்பே பிரசவம். நிறைமாத கர்ப்பிணியான உங்களால் பிரச்சாரத்தில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடியுமா. பெண் என்பதால். இந்தச் சங்கடமான நெருக்கடிச் சூழலில் உங்களுக்கு அனுதாபம் கை கொடுக்கும் என்று கருதுகிறீர்களா. ஒரே குடும்பத்தின் ஒரே வார்டின் அரசியல் மோதலில் பிளவு ஏற்படாதா? என்று நாம் கேட்டதற்கு, நான் அனுதாபத்தை நம்பியிருப்பவளல்ல. நான் களத்திற்குத் தெம்பாகவும் தைரியமாகவும் செல்வேன். குடும்பம் வேறு அரசியல் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ள மாட்டேன். என் கணவர் இந்த வார்டு மக்களுக்குப் பணிகள் செய்தவர் என பட்டாசாய்ப் பதில் வருகிறது ரேவதி பாலீஸ்வரனிடமிருந்து.

 

இதில் இன்னுமொரு விசேஷமும் உண்டு. தாமரை வேட்பாளரின் கணவரான பாலீஸ்வரன் அ.தி.மு.க.விலிருநு்து பா.ஜ.க. பக்கம் வந்தவர். வார்டில் பிரபலமானவர். இங்கு இலை மல்லுக்கு நின்றாலும் அ.தி.மு.க.வினர் மறைமுகமாக தாமரைக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பேச்சும் ஓடிக்கொண்டிருந்தது.

 

ரேவதி பாலீஸ்வரனிடம் போட்டியாளரும், சூரியனில் களம் காணும் எதிர்வேட்பாளரான அவரது அக்கா மகாலட்சுமியோ, எனக்குக் குடும்பம் முக்கியமல்ல. என் கட்சியான தி.மு.க. தான் எனக்கு முக்கியம். யாருக்காகவும், எதற்காகவும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார் போல்டாய்.


தேனீர் கோப்பைக்குள்ளே புயல் என்ற கதையாய் குடும்பக் கூட்டுக்குள்ளே புகுந்திருக்கிறது அரசியல். சீட்டுக்காக நிறைமாத கர்ப்பிணி என்றுகூட பாராமல் களத்தில் மோதவிட்டிருக்கிறது பா.ஜ.க.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.