Skip to main content

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்... கிராம மக்கள் தீர்மானம்...

Published on 21/12/2019 | Edited on 21/12/2019

 

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என ஊர் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 
 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாணதிராயபுரம் ஊராட்சியில் உள்ளது எம்.ஜி.ஆர் நகர். உள்ளாட்சித் தேர்தல் வருவதையொட்டி இந்தப் பகுதி மக்கள் கூட்டம் ஒன்றை நடத்தினர். கூட்டத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
 

மேலும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளான, குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, ஆகியவைகளை தங்கு தடையில்லாமல் செய்யகூடிய,  தமிழக அரசின் திட்டங்களை நல்லமுறையில் செயல்படுத்த கூடிய  வேட்பாளர்களுக்கே நமது வாக்குகளை ஜனநாயக முறைபடி அளிக்க வேண்டும் எனவும், ஊர் கூட்டத்தில் பேசபட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.

 

Village People decision


 

வாணதிராயபுரம் ஊராட்சியில், வாணதிராயபுரம், தென்குத்து, தென்குத்து புதுநகர், கல்லுகுழி, வேலுடையான்பட்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. வாணதிராயபுரம் ஊராட்சி ஒன்பது வார்டுகளைக் கொண்டதாவும், மொத்தம் 4936 வாக்குகளை கொண்டாதவும் உள்ளன.
 

வாணதிராயபுரம் ஊர் கூட்டத்தில் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று நிறைவேற்றப்பட தீர்மானத்தால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை உறுதியாக கடைபிடித்து வரும் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சாமிநாதனிடம் சந்தித்தோம்.


 

அப்போது அவர், பொதுவாக உள்ளாட்சி பதவிகளிலும் மட்டுமல்ல, எம்எல்ஏ மற்றும் எம்பி போன்ற பதவிகளுக்கு போட்டியிடுபவர்களிடம் வாக்காள்கள் கைநீட்டி பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போடும் நிலை உள்ளது. அதனால் மக்கள் அவர்களிடம் தங்கள் பகுதியின் அடிப்படை தேவைகளை திட்டங்களை செய்து தரக்கோரி உரிமையாக கேட்க முடியவில்லை.
 

அண்ணன் தம்பியாக இருந்தாலும் கூட போட்டியிடும் வேட்பாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டால் நாம் அவர்களை தட்டிக் கேட்க முடியாது. பணம் வாங்கி கொண்டு தானே ஓட்டு போட்டீங்கன்னு நேருக்கு நேர் எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். எனவே தான் எங்கள் ஊர் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடி அமர்ந்து பேசி யாரும் எந்த வேட்பாளரிடம் ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை, வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் முடிவெடுத்து உள்ளோம்.


 

எங்கள் கோரிக்கைகள் என்னவென்றால், எங்கள் பகுதிக்கு  தேவையான அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும். அப்படி செய்து கொடுப்பதாக எந்த வேட்பாளர் உறுதி அளிப்பவர்களுக்கு வாக்களிப்பதற்கு தயாராகி உள்ளோம். எங்கள் ஊர் முடிவு எடுத்தது போல், தமிழக மக்களும் இதுபோன்று முடிவெடுத்தால் அரசு திட்டங்கள் முறையாக மக்களுக்குப் போய்ச் சேரும். தமிழகம் தன்னிறைவு பெறும். இதை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் ஊர்மக்களின் விருப்பம் என்கிறார்.
 

இந்த ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவிக்கு ஆறுமுகம், பழனிவேல், வைத்தியநாதன், சர்க்கரையா என நான்கு பேர் போட்டியிடுகின்றனர். இந்த நால்வரில் ஆறுமுகம் 2001 முதல் 2006 வரை ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். மற்ற மூவரும் களத்திற்கு புதியவர்கள். நால்வரில் யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பதை இந்த ஊர் மக்கள் மட்டுமல்ல, சுற்று வட்டார கிராம மக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.
 


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.