Advertisment

உள்ளாட்சி தேர்தலில் திமுக முன்னிலை... அதிமுகவிற்கு பின்னடைவு... அதிர்ச்சியில் அதிமுக வேட்பாளர்கள்!

தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒன்றிய கவுன்சிலர் 5090 இடங்களில் திமுக பெரும்பான்மை இடங்களில் அதிமுகவை விட முன்னணியில் உள்ளது. அதே போல் மாவட்ட கவுன்சிலர் 515 இடங்களில் தற்போதைய நிலவரப்படி திமுக பெரும்பான்மை இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. மதியம் 12.30 நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் பின்னடைவில் உள்ளனர். அதோடு, அதிமுக ஆட்சியில் இருந்தும், அதிக அளவு செலவு செய்தும் போதிய இடங்களில் அதிமுக முன்னிலை பெறாமல் இருப்பதால் வேட்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர்.

Advertisment

dmk

திருவாடானை- கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கவிதா வெற்றி.

Advertisment

விருதுநகர்- எரிச்சநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்துப்பாண்டி வெற்றி.

சாத்தான்குளம்- கோமானேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்து வெற்றி.

ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி.

கன்னியாகுமரி-மங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜன் வெற்றி.

கும்பகோணம்- மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் புவனேஸ்வரி வெற்றி.

மதுரை-சக்கரப்பநாயக்கனுர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜான்சிராணி வெற்றி.

தஞ்சாவூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி.

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி.

தூத்துக்குடி- கரிசல்குளம் ஊராட்சியில் தலைவர் தேர்தலில் தங்கபாண்டியம்மாள் வெற்றி.

திண்டுக்கல்-நீலமலைக்கோட்டை ஊராட்சி தலைவர் தேர்தலில் ராதா வெற்றி.

கும்பகோணம்- திருப்புறம்பியம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வைஜெயந்தி வெற்றி.

திண்டுக்கல்-புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் லட்சுமி வெற்றி.

ஈரோடு-புங்கார் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி.

கன்னியாகுமரி-மருதூர்க்குறிச்சி ஊராட்சிதலைவர் தேர்தலில் செல்வராணி வெற்றி.

விருதுநகர்- வத்திராயிருப்பு 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி.

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி.

eps stalin results candidates admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe