Skip to main content

டம்பி வேட்பாளர்கள்... அறிவாலயத்தில் குவியும் புகார்கள்... 

Published on 07/01/2020 | Edited on 07/01/2020

 

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அறிவாலயத்தில் புகார்கள் குவிகின்றன. பல மாவட்டங்களில் திமுக மா.செ.க்களுக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. அறிவாலயத்திற்கு சென்ற புகார்களில் அதிகப் பரபரப்புகளை எதிரொலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.

 

dmk



திருவள்ளூர் திமுக பஞ்சாயத்து. திருவள்ளுர் வடக்கு மாவட்ட திமுக  செயலாளராக இருப்பவர் கும்பிடிப்பூண்டி வேணு. கும்முடிப்பூண்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 26 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 17 இடங்களை அ.தி.மு.க.விடமும் சுயேட்சையிடமும் இழந்துள்ள திமுக, வெறும் 9 இடங்களை மட்டுமே கைப் பற்றியிருக்கிறது. மா.செ.வேணுவும் அவரது மகன் ஆனந்துமே இதற்கு முழு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர் மாவட்ட உடன்பிறப்புகள். 


 

இது குறித்து நம்மிடம் பேசிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகள்,  "கும்முடிப்பூண்டி ஒன்றியம் தி.மு.க. விற்கு எப்போதுமே வலிமையான வெற்றியை கொடுக்கக் கூடியது. 26 இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு 3 இடங்களை மட்டுமே ஒதுக்கி விட்டு, 23 இடங்களில்  போட்டியிட்டது திமுக. போட்டியிட்ட  இடங்களில்  கட்சிக்கு  சம்பந்தமில்லாத பல பேருக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதன் பின்னணியில் லகர கணக்கில் வைட்டமின்கள் விளையாடின.  


  

உதாரணத்திற்கு, சித்தராஜ கண்டிகை வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஊராட்சி செயலாளர் ஜெயச்சந்திரன் சீட் கேட்டிருந்தார்.  அந்த பகுதியில் மக்களிடம் செல்வாக்கு    மிக்கவர்.  ஆனால், இவருக்கு சீட் மறுக்கப்பட்டு, கட்சிக்கு அறிமுகமில்லாத பிரபாகரன் என்பவருக்கு சீட் கொடுத்தனர். சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ஜெயச்சந்திரன், உடனே, ஊராட்சி செயலாளர் பதவியிலிருந்து விலகி,  சுயேட்சையாக களமிறங்கினார். தேர்தல் முடிவில்,1100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுவிட்டார் ஜெயச்சந்திரன். தி.மு.க.விற்கு அங்கு மூன்றாவது இடமே கிடைத்திருக்கிறது. 
 

ஜெயச்சந்திரனுக்கு சீட் மறுக்கப்பட்டதைப் போலவே பல இடங்களில் மக்களிடம் செல்வாக்கு இல்லாதவர்களுக்கு சீட் வழங்கினர். அது மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வினரிடம் வைட்டமின் பெற்றுக்கொண்டு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதும் நடந்திருக்கிறது. அதற்கு பிரதிபலனாக, அதிமுக போட்டியிடும் இடங்களில் டம்பி வேட்பாளர்களை நிறுத்தினர். ஆக, திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியதன் பின்னணியில் அதிமுகவோடு ரகசிய ஒப்பந்தமும், அதற்காக சீட்டுகள் விற்கப்பட்டதும்தான் காரணங்களாக இருக்கின்றன. இது குறித்து அறிவாலயத்துக்கு புகார்களை அனுப்பியுள்ளோம் ‘’ என கொட்டித்தீர்த்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

மக்களவைத் தேர்தல்; போட்டியின்றி தேர்வான பா.ஜ.க வேட்பாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
BJP candidate selected without competition at Lok Sabha elections

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 19ஆம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ், பா.ஜ.க, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.  அதன்படி, குஜ்ராத் மாநிலத்துக்கு உட்பட்ட சூரத் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் போட்டியிட பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில், பா.ஜ.க சார்பில் முகேஷ் தலால் வேட்புமனு தாக்கல் செய்தார். அதே போல், காங்கிரஸ் கட்சி சார்பாக நிலேஷ் கும்பானி, பகுஜன் சமாஜ் கட்சி பியோரேலால் பாரதி உட்பட 8 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்,காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனுவில் போலியான சாட்சி கையெழுத்திட்டதாக கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக சுரேஷ் பத்ஷாலா அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது வேட்புமனுவும் தகுதியற்றது எனக் கூறி, அவருடைய வேட்புமனுவிலும் போலியான சாட்சி கையெழுத்திட்டதாகக் கூறி நிராகரிக்கப்பட்டது.

இதனால், சூரத் மக்களவைத் தொகுதிக்கான போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் இன்று (22-04-24) என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிட்டனர்.

இதனால், சூரத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் முகேஷ் தலால், வாக்குப்பதிவுக்கு முன்னரே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.  இது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளையும் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.