Skip to main content

ஆசைகாட்டி ஏமாற்றியதாக பாமக தரப்பில் ஆதங்கம்

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

 

கடலூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஆசைகாட்டி ஏமாற்றியதாக பாமக தரப்பில் ஆதங்கத்தில் உள்ளனர்.
 

பாமக கவுன்சிலர் டாக்டர் தமிழரசிக்கு தான் தலைவர் பதவி என முதல்வர் வரை பேச்சுவார்த்தை நடத்தியும் கூட, திடீரென அதிமுக சார்பில் திருமாறன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவராக தேமுதிகவை சேர்ந்த ரிஸ்வானா பர்வீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் பாமக தரப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர். 

 

cuddalore district



14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடந்த தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் அண்ணாகிராமம் ஒன்றிய தலைவராக ஜானகிராமனும், துணைத்தலைவராக தேமுதிகவின் ஜான்சி ராணியும் வெற்றி பெற்றனர். கடலூர் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த பக்கிரியும் துணை தலைவராக தேமுதிகவைச் சேர்ந்த அய்யனார் என்பவரும் வெற்றி பெற்றனர்.
 

கம்மாபுரம் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த மேனகா தலைவராகவும், முனுசாமி துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். குமராட்சி ஒன்றியத்தில் தலைவராக சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் மனைவி பூங்குழலி தலைவராகவும், ஹேமலதா துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கீரப்பாளையம் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியுடன் பாமகவை சேர்ந்த தேவதாஸ் படை ஆண்டவர் மனைவி கனிமொழி தலைவராகவும், அதிமுகவை சேர்ந்த காஷ்மீர் செல்வி துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர்.


 

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் அதிமுக ஒ.செ. கோவிந்தராஜ் மனைவி கலையரசி தலைவராகவும், ஹேமலதா துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். மேல்புவனகிரி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் சிவப்பிரகாசம் தலைவராகவும், சுயச்சை வேட்பாளர் வாசுதேவன் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பண்ருட்டி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் தம்பி பாலமுருகன் தலைவராகவும், தேவகி துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றனர்.
 

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த கருணாநிதி தலைவராகவும், பாமகவை சேர்ந்த மோகனசுந்தரம் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். திருமுட்டம் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த லதா தலைவராகவும், திருச்செல்வம் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். விருத்தாசலம் ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை தலைவராகவும், பாமகவை சேர்ந்த பூங்கோதை துணைத்தலைவராகவும் வெற்றிபெற்றனர்.


 

காட்டுமன்னார்குடி ஒன்றியத்தில்  திமுகவைச் சேர்ந்த சத்யா பர்வீன்  தலைவராகவும், செல்வகுமார் துணைத்தலைவராகவும் வெற்றி பெற்றனர். மங்களூர் ஒன்றியத்தில் 24 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுகவிற்கு பத்தும், திமுக பத்தும், தேமுதிக 1, பிஜேபி ஒன்று, சுயேச்சை இரண்டு என வெற்றி பெற்றனர்.  தலைவர் தேர்தலில் திமுக சார்பில் சுகுணா என்பவரும், அதிமுக சார்பில் மலர்விழியும் போட்டியிட்டனர். இருவரும் சம அளவில் வாக்குகள் பெற்றதால், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் நல்லூர் ஒன்றியத்தில் தேர்தல் அதிகாரி ரவிச்சந்திரன் உடல்நிலை சரியில்லாமல் தேர்தல் நடத்த வரவில்லை என தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.