Advertisment

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்காக, அ.தி.மு.க. சார்பில் 38 மாவட்டங்களுக்கான தேர்தல் பணிக்குழுவை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.