Advertisment

ஓரிரு நாளில் புதிய நிர்வாகிகள் பட்டியல்: ஓ.பி.எஸ். பேட்டி

o panneerselvam

Advertisment

அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஜெ. பிறந்தநாளன்று நலத்திட்டங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும். அம்மா உணவகம் தொடர்ந்து நடத்தப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறினார்.

o panneerselvam aiadmk office
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe