Advertisment

வெளியான வினாத்தாள்... மின்வாரிய தேர்வு எழுதியோர் மத்தியில் பரபரப்பு

paper -

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மின்வாரியத்தில் 33 ஆயிரம் காலி பணியிடத்திற்கு முதல்கட்டமாக 5 ஆயிரம் பேர் கேங்மேன் பதவிக்கு நியமிக்கத் தமிழக அரசு அறிவித்த நிலையில், அதற்காக 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான உடல் தகுதித் தேர்வு நவம்பர் 25 தொடங்கி டிடம்பர் 16ல் முடிவடைந்தது. அதில் 7500 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அடுத்தகட்ட எழுத்துத் தேர்வுக்கு 15ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய, இத்தேர்வு தமிழக முழுவதும் காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாளும், வினாத்தாளும் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்வார்கள்.

இந்த நிலையில் அந்த வினாத்தாள் தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. முன்கூட்டியே வினாத்தாள் வெளியிடப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. மேலும் செல்போன் உள்ளே அனுமதி இல்லாதபோது செல்போனில் எப்படி எடுக்க முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

exam Question Tamilnadu state electricity board
இதையும் படியுங்கள்
Subscribe