Skip to main content

'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பினை உடனே கலைக்க வேண்டும்! வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

rama seyon

 

தமிழக காவல்துறையின் ஒரு அங்கமாக திகழும் 'பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' அமைப்பினை பொதுமக்களின் நலன் கருதி உடனடியாகக் கலைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் கூறுகையில், "காவல்துறைக்கு உதவும் வகையில், பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் ஒரு பாலமாக இருப்பதற்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்கிற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் தற்போது நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த நபர்களுடைய அத்து மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கண்ணியமிக்க காவல்துறைக்குக் கடும் கெட்டபெயர் ஏற்படுகிறது. அவர்களின் எதேச்சை போக்கு, காவல்துறை அதிகாரிகளையே மிஞ்சும் அளவிற்கு மாறிவிட்டது.

 

வருடம் முழுவதும் குடும்பத்தை மறந்து, சுக துக்கங்களில் பங்கேற்க இயலாமல் மக்கள் பணியாற்றி வருகிற நேர்மையான காவல்துறையினருக்கும்கூட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒரு கறுப்பு மை.

 

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நபர்களால் தனிநபர் வாழ்வு சிதைக்கப்படுகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நபர்கள் தங்களை காவலர்களாகவே மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பல்வேறு சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக காவல்துறைக்கு களங்கத்தை விளைவித்து வருகிறார்கள். இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலருடன் இவர்கள் சென்று தூக்கம் இழந்து காவலர்கள் உரிய முறையான முழு பயிற்சியின்றி வலம் வந்து பகலில் உறங்கும் நிலை தவிர்க்க இயலாத ஒன்றாகி தனி மனித வாழ்வில் ஏற்றம் இன்றி வாழும்  நிலை ஏற்படுகிறது. அவர்களுடைய குடும்பத்திற்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இந்த அமைப்பின் நபர்கள் தங்களை காவலர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள். அவ்வாறு சித்தரித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்தும் அவதூறு நிலைக்கும் தங்களை உருவகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

 

காவல் துறைக்கான இடைத்தரகர்களாகவும் தங்களை மாற்றிக்கொண்டும், காவல்துறை பெயரைச் சொல்லி கையூட்டு பெற்றும் வருகிறார்கள். காவல் நிலைய செயல்பாடுகளில் அவர்களின் தலையீடு மிக மிக அதிகமாக இருக்கிறது. காவல் நிலைய விசாரணை செயல்பாடுகளில்கூட உடனிருந்து சட்டபூர்வமான அத்துமீறல்களைச் செய்கிறார்கள். காவல்துறையின் நடைமுறை மற்றும் ரகசியச் செயல்பாடுகளையும் வெளியில் கசிவதற்கு காரணமாக இருக்கிறார்கள்.  

 

மேலும் காவல் நிலைய ஆவணங்களை கையாளும் சட்டவிரோத செயலையும் செய்கிறார்கள். காவலர்களின் மறு உருவமாகவே தங்களை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். காவலர்களைப்போல் அங்கீகரிக்கப்பட்ட தடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தடிகளை கையில் வைத்துக்கொண்டு அத்துமீறி சட்டவிரோதமாக பயன்படுத்தி சமூகத்தை அச்சமூட்டி வருகிறார்கள். பல இடங்களில் அத்துமீறி வாக்கி டாக்கி தன்வசம் வைத்துக்கொண்டு அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

 

மேலும் பொதுமக்களை அவமதிப்பது, எடுத்தெறிந்து பேசுவது, மரியாதை குறைவாக நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டு வருகிறார்கள். பொதுவெளியில் கையில் தடியை வைத்துக்கொண்டு மக்களை தடியால் அடிப்பது, அவர்கள் கடும் சொற்களால் அழைப்பதும், திட்டுவதும் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

 

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை மாற்றி காவல்துறை பொதுமக்களின் எதிரியாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மாற்றிவருகிறார்கள்.

 

இந்த அமைப்பின் சட்ட விரோத செயல்பாடுகளால் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக வர்ணிக்கப்பட்ட தமிழக போலீஸ் தற்பொழுது தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் வில்லன்கள் ரேஞ்சுக்கு மக்கள் மனதிலே விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சார்ந்த நபர்களின் சட்டவிரோத செயல்களும் அடங்கும். அவர்கள் தங்களை காவல் அதிகாரிகளாக பாவித்துக் கொண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

 

http://onelink.to/nknapp

 

குறிப்பாக ஊரடங்கு காலத்தில்  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செய்த அட்டூழியங்களை பட்டியலிட முடியாத அளவிற்குச் செய்திருக்கிறார்கள். வாகனங்களில் செல்வோரை தடியால் அடித்துநிறுத்துவதும், வாகனங்களில் செல்லும்போது தடியால் அடிப்பதும், தோப்புக்கரணம் போடச் சொல்வதும், வண்டிகளில் ஹெட்லைட்டை உடைப்பது போன்ற சட்ட விரோதச் செயல்களைத் தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

 

ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைக் கலைத்து காவல்துறைக்கு கூடுதலான நபர்களை நியமனம் செய்து சட்டம் ஒழுங்கையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க  வேண்டும்," என்கிறார் அவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.