Skip to main content

புதிய எம்.பி.க்களை சந்திக்க மறுக்கும் ராகுல்... லாலு, சரத்பவார் அட்வைஸ்...

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

 


காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25ஆம் தேதி காங்கிரஸின் காரியக் கமிட்டி டெல்லியில் கூடியது. அதில் சிறப்பு அழைப்பாளரா கலந்துக்கிட்ட பிரியங்கா காந்தி, நானும் ராகுலும் கடுமையா பிரச்சாரம் செய்தோம். ஆனால் சீனியர் தலைவர்கள் யாரும் இது போன்ற அக்கறையைக் காட்டலை. பா.ஜ.க. நம் மீது வைத்த புகார்களுக்கும் கூட நம் தலைவர்கள் பதில் சொல்ல வாயைத் திறக்கலைன்னு ஆவேசமாக பேசியிருக்கிறார். 


 

 

rahul


 

அதேபோல் மன வேதனையோடு பேசிய ராகுலும், கட்சிக்கு உழைப்பதைவிட, நம் சீனியர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கறதிலேயே குறியா இருந்தாங்க. வலியுறுத்தியும் மிரட்டியும் சீட் வாங்கினாங்கன்னு ப.சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றி சுட்டிக் காட்டியதோடு, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்றேன்னு ரிசைன் லெட்டரையும் எடுத்து நீட்டினார். 
 

ஆனால் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்தான், "உங்கள் முடிவு பெருந்தன்மையைக் காட்டினாலும், நீங்க இப்படியொரு முடிவை எடுக்கத் தேவையில்லை. இந்த நேரத்தில் கட்சியை வழிநடத்திச் செல்ல உங்களால்தான் முடியும்'ன்னு சொல்லி, ராகுலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துட்டார். 
 

இதனிடையே ராஜினாமா செய்யும் முடிவை கைவிடுங்கள் என்று ராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், மக்களின் மனங்களில் நீங்கள் இருக்குறீங்க. எனவே, தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணத்தை விட்டு விடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். உடனே ராகுல் தமிழகத்தில் திமுக கூட்டணி  அடைந்திருக்கும் இந்த மாபெரும் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியும் தேர்தல்  வெற்றிக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
 

லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில், ராகுலின் பதவி விலகல் முடிவானது காங்கிரஸ்க்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் தற்கொலை முடிவாக அமையும். பாஜகவின் பொறியில் ராகுல் விழுந்துவிடக்கூடாது. காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவராக்கினால் அவரை பொம்மை தலைவராகத்தான் விமர்சிப்பார்கள். அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு அந்த வாய்ப்பை ராகுல் ஏன் தர வேண்டும் என்று கூறியுள்ளார். 


 

 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களைக் கூட சந்திப்பதில்லை என மறுத்து வரும் ராகுல்காந்தி, பிரபல தலைவர்களை மட்டுமே சந்தித்து வருகிறார். அந்த வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் ராகுல்காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. சரத்பவாரும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு பற்றி பலவிதமான யூகங்கள் எழுந்துள்ளன. அதாவது காங்கிரஸ் கட்சியில் இருந்த சரத்பவார் கடந்த 1999ல் அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸை தொடங்கினார். இதனால் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இணைய வாய்ப்பு உள்ளது என்றும், கட்சித் தலைவராக ராகுல் இருக்க விரும்பாததால் சரத்பவாரை தலைவராகலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 

இந்த நிலையில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழு கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியில் சில மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.