Skip to main content

கர்நாடக போலிசுடன் தமிழகம் வந்த கொள்ளையன் முருகன்! அதிர்ச்சி மற்றும் குழப்பத்தில் தமிழக போலிஸ்!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

 

திருச்சியில் மிகப் பிரபலமான நகைக் கடையான லலிதா ஜீவல்லரியில் துளைபோட்டு நடந்த 13 கோடி ரூபாய் நகைக் கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூர் கொள்ளையன் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை திருச்சி டி.சி. மயில்வாகணன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் சுரேஷ் திருவண்ணாமலையிலும் முருகன் பெங்களூர் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

 

murugan



பெங்களூர் சிறையில் இருந்த முருகனை பெங்களூர் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக அவரை அழைத்துக்கொண்டு பெங்களூரு போலீசார் நேற்றிரவு பெங்களூரில் இருந்து கிளம்பி இன்று பெரம்பலூர் வந்தனர்.
 

பெங்களூரில் நடந்த வங்கி கொள்ளையில் எடுக்கப்பட்ட தங்கத்தை பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒருத்தரிடம் கொடுத்ததாக முருகன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து முருகனை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே பெங்களூரு போலீசார் வந்துக்கொண்டிருந்தனர். 


 

 

அப்போது கர்நடாக போலிசார் முருகனை அழைத்துக்கொண்டு தமிழகத்திற்கு நுழைந்து விட்டார்கள் என்ற தகவலை உளவுத்துறை மூலம் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் வேப்பந்தட்டையில் வைத்து கர்நாடக போலிசை தடுத்து நிறுத்தியது.
 

அப்போது பெரம்பலூர் டி.எஸ்.பி. கோபால்ராஜன் மற்றும் போலீசார், ஏற்கனவே திருச்சியில் சமயபுரம் டோல்கேட்டில் வங்கி கொள்ளை மற்றும் லலிதா ஜுவல்லரி ஆகிய இடங்களில் நகை கொள்ளையடித்திருப்பதில் முருகனுக்கு தொடர்பு இருப்பதாகவும், முருகன் நகைகளை இங்கே கொடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லியிருப்பதால் அந்த நகைகள் திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளா? என்று தெரிந்து கொள்ள வேண்டும், நாங்களும் சேர்ந்து விசாரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளனர். முருகனையும் கர்நாடகா போலீஸையும் அழைத்துக்கொண்டு பெரம்பலூர் பகுதியில் பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

 

திருச்சி தனிப்படை போலீசார் முருகனை அழைத்து வந்து விசாரிக்க நினைக்கையில் அதற்குள்ளாக கர்நாடக போலிஸ் முருகனை தமிழகம் அழைத்து வந்திருப்பது திருச்சி தனிப்படைக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி தனிப்படை போலீசார் பெரம்பலூர் சென்றிருக்கிறார்கள்.
 

இதற்கு இடையில் நேற்று திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் திருச்சி போலீஸ் வாரண்டுடன் பெங்களூரு போவதாக பத்திரிகை அறிவிப்பு கொடுத்த நிலையில் கொள்ளையன் முருகனுக்கு பெங்களுர் நீதிமன்றம் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்தநிலையில் எப்படி கர்நாடக போலிஸ் முருகனை பெங்களுர் சிறையில் இருந்து அழைத்து வந்திருக்கிறார்கள்? என்கிற சந்தேகம் தமிழக போலிசுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், இதுகுறித்தும் விசாரணை தொடர்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார்.