அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் கடந்த 1-ந்தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சரும், தமிழக முன்னாள் பா.ஜ.க மாநில தலைவருமான எல்.முருகன் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்றுசந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் விஜயலட்சுமியின் உருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஓ.பி.எஸ்சை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த எல்.முருகன்! (படங்கள்)
Advertisment