Skip to main content

“திமுக சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது..” - எல். முருகன் 

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

"DMK says one thing and does another." - L. Murugan

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “83 வருட பாரம்பரியமிக்க அகில இந்திய வானொலி நிலையத்தின் செயற்பாடுகள் விவசாயம், அரசியல், தேசியம், வெளிநாடு சம்பந்தமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது. பாரம்பரியமிக்க இந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

 

பாரத பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்காக மிகப்பெரிய திட்டத்தைக் கொண்டுவந்தார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் முன்னேறும் வகையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் சிறப்பு பொருளாதார பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. கடல்பாசி மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடல் பாசியை அதிகளவு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். இலட்சத்தீவு சென்று அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்த திட்டத்தால் பொருளாதாரம் அதிகம் வளரும். இந்தியாவில் கொச்சின், விசாகப்பட்டினம், சென்னை, மேற்கு வங்கம், பரதீப் ஆகிய ஐந்து இடங்களில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

 

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கிவருகிறோம். மீன்பிடி தொழிலுக்குப் பயன்படுத்தக் கூடிய எரிபொருளுக்கான கூடுதல் வரியை (Road cess) நீக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து நிதியமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம். மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழ்நாடு  மீனவர்கள் 600 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் ஒரு மீனவர் கூட சுட்டுக்கொல்லப்படவில்லை.

 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததையெல்லாம் கூறினார்கள். பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால் அது வழங்கப்படவில்லை. திமுக சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.