Skip to main content

இடைத்தேர்தல்: குடியாத்தம் தொகுதி... ஆளும்கட்சி, எதிர்கட்சி பிரமுகர்களின் ஆசையும் - சர்ச்சையும்!!!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
kudiyaththam


 

அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் எம்.எல்.ஏ பின்னால் அணி வகுத்ததால் சபாநாயகர் மூலமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அந்த தொகுதிகள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த தொகுதிகளில் எப்போது தேர்தல் என தெரியாத நிலையில் தேர்தல் பரபரப்பு தொகுதியில் தொற்றிக்கொண்டது.


இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அந்த தொகுதிகளில் சீட் வாங்கிவிட வேண்டும்மென அதிமுக, திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் துடியாக துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் குடியாத்தம் தொகுதியில் வேட்பாளராக நிற்க திமுகவில் சீட் கேட்பவர்களை பார்த்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குடியாத்தம் தனி தொகுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயந்திபத்மநாபனே மீண்டும் தினகரன் கட்சி சார்பில் களத்தில் இறங்குகிறார். அதிமுகவில் குடியாத்தம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர்கள் தங்கமணி, சேவூர்.ராமச்சந்திரன், வீரமணி, ஆதிராஜராம், மா.செ ரவி எம்.எல்.ஏ, லோகநாதன் எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ கனவில் உள்ள ஆம்பூர் ந.செ மதியழகன், கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், பேரணாம்பட்டு தெய்வகுமார், குடியாத்தம் நகர துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி, பேராணம்பட்டு எக்ஸ் கவுன்சிலர் இன்பரசன், வழக்கறிஞர் அணி கோவிந்தசாமி போன்றோர் ஜோலார்பேட்டை முதல் சென்னை வரை காய் நகர்த்துவதோடு, பெட்டியோடு அலைகின்றனர். என் ஆசியில்லாம இங்க யாரும் சீட் வாங்க முடியாது என கட்சியில் அமைச்சர் வீரமணியால் ஓரம்கட்டப்பட்ட குடியாத்தம் ந.செ பழனி சவடால் விட்டுக்கொண்டுள்ளார்.


 

kudiyaththam



திமுகவில் கடந்த முறை நின்று தோற்றுப்போன ராஜமார்தாண்டன் தற்போதும் கேட்கும் முடிவில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை சீட் தரப்பட்டு தோல்வியை தழுவியவர் என்பதால் இவருக்கே திரும்ப தந்தா தோல்வி தான் என உட்கட்சியிலேயே பேசி அவரை டேமேஜ் செய்கின்றனர். குடியாத்தம் ஒ.செ கல்லூர்ரவி வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரது தம்பி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்மு என்பவரை மணந்துள்ளார். அந்த அம்முவை பொதுத்தேர்தலின்போது ரிசர்வ் தொகுதியான கே.வி.குப்பத்தில் சீட் வாங்கி நிறுத்தியபோதே கட்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட பிரமுகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. அம்மு தோற்றுப்போனார். தற்போது குடியாத்தம் தனி தொகுதி இடைத்தேர்தலில் சீட் கேட்கும் முடிவில் இருக்க கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சேர்மன் காத்தவராயன், முன்னால் எம்.எல்.ஏ கோவிந்தன் மகன் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி மா.செ முருகானந்தம், ஆசிரியர் கௌதமபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் மனோஜ், உட்பட சிலர் எம்.எல்.ஏ சீட் தலைமை தந்துவிடும் என லாபி செய்துக்கொண்டு உள்ளனர்.
 

ஆளும்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் தேர்தல் எப்போது என தெரியாத நிலையில் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டம், பூத்கமிட்டி கூட்டம் என நடத்தி கட்சியினரை தேர்தலுக்கு தயார் செய்துக்கொண்டுள்ளார்கள். பாலாற்று மணல் கொள்ளையால் வரும் கோடிக்கணக்கான பணம் ஆளும்கட்சியிடம் அபரிதமாக உள்ளதால் பூத்க்கு 5 ஆயிரம் என முதல்கட்டமாக வழங்கியுள்ளார்கள் என குற்றம்சாட்டுகின்றனர் திமுகவினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பேராசை தான் காரணம்'-விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் குற்றச்சாட்டு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Greed is the reason'- Congress candidate interview with Vilavanko

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

மக்களவை தேர்தலோடு கன்னியாகுமரியில் விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. அதற்கான பரப்புரைகளிலும் அரசியல் கட்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தாரகை கத்பர்ட்டைக் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,''முன்பு விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இருந்தார். அவர் செய்ய வேண்டிய கடமைகளை உண்மையாக தெளிவாக செய்திருக்கிறார். ஏனென்றால் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற வரைக்கும் மிக தெளிவாகத்தான் மக்களுக்கான பணியை செய்தார். இன்றைக்கு அவர் பேராசை காரணமாக காங்கிரசை விட்டு பாஜகவிற்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் வரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அதில் மக்கள் மத்தியில் என்ற மாற்றுக் கருத்தும் கிடையாது. பாஜக செய்யும் பொய்ப் பிரச்சாரம் எடுபடப் போவதில்லை. அதை நீங்கள் ஜூன் நான்காம் தேதி பார்க்கத்தான் போகிறீர்கள்'' என்றார்.

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.