Skip to main content

செயல் தலைவர்களுக்கு பொறுப்புகளை பிரித்துக்கொடுத்தார் கே.எஸ்.அழகிரி!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019
ks azhagiri



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர்களாக உள்ள எச்.வசந்தகுமார், கே.ஜெயக்குமார், எம்.கே. விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோருக்கு கட்சிப் பணி மற்றும் தேர்தல் பணி பொறுப்புகளை பிரித்துக்கொடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கீழ்க்கண்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் முன்னணி அமைப்புகள், துறைகள் கட்சிப் பணி மற்றும் தேர்தல் பணி குறித்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அந்தந்த மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 

எச். வசந்தகுமார், எம்.எல்.ஏ.,    மதுரை
    திண்டுக்கல்
    திருச்சிராப்பள்ளி
    சிவகங்கை
    புதுக்கோட்டை
    வடசென்னை
    தென்சென்னை மற்றும்
    சிறுபான்மைத்துறை
    ஊடகத்துறை
    மீனவர் காங்கிரஸ்

 

டாக்டர் கே. ஜெயக்குமார்    திருவள்ளூர்
    கடலூர்
    நாகப்பட்டிணம்
    திருவண்ணாமலை
    திருவாரூர்
    சேலம்
    சென்னை கிழக்கு மற்றும்
    எஸ்.சி. துறை
    பிற்படுத்தப்பட்டோர் துறை
    ஆராய்ச்சித்துறை
    அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்
    ஐ.என்.டி.யு.சி.




டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்    காஞ்சிபுரம்
    விழுப்புரம்
    தருமபுரி
    கிருஷ்ணகிரி
    வேலூர்
    பெரம்பலூர்
    அரியலூர் மற்றும்
    மாணவர் காங்கிரஸ்
    சேவாதளம்
    விவசாய பிரிவு
    மருத்துவ பிரிவு

 

மயூரா ஜெயக்குமார்    கன்னியாகுமரி
    திருநெல்வேலி
    தூத்துக்குடி
    விருதுநகர்
    இராமநாதபுரம்
    தேனி
    தஞ்சாவூர் மற்றும்
    இளைஞர் காங்கிரஸ்
    மகிளா காங்கிரஸ் 

மோகன் குமாரமங்கலம்    கோயமுத்தூர்
    நீலகிரி
    திருப்பூர்
    ஈரோடு
    நாமக்கல்
    கரூர்
    சென்னை மேற்கு  மற்றும்
    தொழில் வல்லுநர் பிரிவு
    தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடகத்துறை
    சட்டத்துறை
    மனித உரிமைத்துறை
    தகவல் அறியும் உரிமைத்துறை

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"BJP won't win more than 180 seats" - Priyanka Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரோட்ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பிரியங்கா காந்தி பேசுகையில், “பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

இது குறித்து ஏன் பேசவில்லை என ஊடகங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அவரது கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றினால் இட ஒதுக்கீடு மற்றும் மக்களின் உரிமைகள் என்னவாகும்?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கவில்லை என்றால் பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.