Advertisment
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்காக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னை, ராயப்பேட்டை 63வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வாக்கு சேகரித்தார்.