Skip to main content

'அமைச்சர் பதவிகேட்டு கூட்டணிக்கு வந்துவிடாதீர்கள்'-கே.பி.முனுசாமியின் பேச்சு பாஜகவுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியா?

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை தற்போதே தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. அதிமுக தலைமையும் அதற்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வந்த நிலையில், இன்று ராயப்பேட்டையில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கியது அதிமுக தலைமை.

 

அதிமுக தலைமை ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைமையோ பாஜக மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று தொடர்ந்து கூறி வருகிறது. அண்மையில் சென்னையில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அதிமுக-பாஜக கூட்டணியை மேடையிலேயே உறுதிப்படுத்தியிருந்தனர்.  

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

அதனைத் தொடர்ந்தும் மேலிடம்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என தமிழக பாஜக தலைமை தொடர்ந்து தெரிவித்து வருகிறது. அதேபோல் அண்மையில் சிவகங்கையில் வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை சிவகங்கையின் சட்டமன்றத் தொகுதிகளை பாஜக கைகாட்டும் ஒருவருக்கு கொடுங்கள் 2021-ஆம் ஆண்டு தேர்தலில் ஹெச்.ராஜாவை சட்டமன்ற உறுப்பினராக்குவோம், அமைச்சராக்குவோம் எனக் கூறியிருந்தார்.

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

இச்சூழலில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கடந்த 50 ஆண்டு காலமாக எந்த தேசியக் கட்சியும் தமிழகத்தில் உள்ளே வரவிடாமல் திராவிட இயக்கம் தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய முயற்சிக்கின்றன சில அரசியல் கட்சிகள். சிலர் சொல்லுகிறார்கள் திராவிட இயக்க ஆட்சியிலே இந்த நாட்டை சீரழித்து விட்டார்கள் என்று. யார் சொல்வது, சில தேசியக் கட்சிகள் சொல்கிறது. சில சந்தர்ப்ப வாதிகள் சொல்கிறார்கள். உயர் நிலையிலிருந்து நீண்டகாலமாக, தந்தை பெரியார் காலத்திலிருந்தே இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்ற ஒரு சமூகம், ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையில் தான் ஆட்சி. இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்கு பொருளும் இல்லை தேவையும் இல்லை.

 

கூட்டணி அமைப்போம், கூட்டணி மந்திரிசபை அமைப்போம் என்று எந்த அரசியல் கட்சியாவது நம்மோடு கூட்டணி வந்தால் அவர்கள் தயவு செய்து சிந்தித்துக் கொள்ளுங்கள் என்றார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது கவனத்தைப் பெற்றுள்ளது. 

 

KP Munuswamy's speech an end to the BJP?

 

சிதம்பரத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த பாஜக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்பொழுது கே.பி.முனுசாமியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தந்த கட்சிகள் தங்களுடைய கட்சிக்கு பலம் அதிகமாகும், தொண்டர்கள் உற்சாகமாவார்கள் என்ற அடிப்படையில் கருத்துகளை சொல்வது வழக்கம். அந்த வழக்கித்தின் அடிப்படையில் பேசி இருந்தால் அதை குற்றம் சொல்ல மாட்டேன். அது அவர்களுடைய கட்சியை பொறுத்த விஷயம் என்றார்.

 

அதிமுக தலைமை தேர்ந்தெடுத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா அல்லது தமிழக பாஜக சொல்லும்படி பாஜக மேலிடம் கைகாட்டும் நபர்தான் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விகள் தொடர்ந்து வந்த நிலையில், அதிமுக தலைமை அறிவித்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர், அமைச்சர் பதவி கேட்டு கூட்டணிக்கு வந்து விடாதீர்கள் என்பதுபோல் கே.பி.முனுசாமி பேசியுள்ளது பாஜகவின் கூட்டணிக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.