Skip to main content

ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இருவரையும் கட்சியை விட்டு நீக்க நடவடிக்கை... அ.தி.மு.க. கூட்டத்தில் அதிரடித் தீர்மானம்

Published on 12/07/2021 | Edited on 12/07/2021

 

O.P.S. E.P.S. Action resolution to expel both from the party

 

சசிகலாவிடம் அ.தி.மு.க. தொண்டர்கள் பேசும் ஆடியோ அடுத்தடுத்து வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சசிகலாவுடன் பேசிய தொண்டர்களை அ.தி.மு.க.வின் தலைமை கட்சியிலிருந்து நீக்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ‘ஜெ’ பேரவை இணைச் செயலாளரான ரூபவேலன் சசிகலாவிடம் பேசிய ஆடியோ வெளியாகியதோடு, கட்சிக்கு இரட்டை தலைமை கூடாது; ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று அவர் வெளிப்படையாகப் பேச, அ.தி.மு.க.வின் தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கியது. இதனால் கோவில்பட்டி நகர மற்றும் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்திருக்கிறார்கள். 

 

அதன் வெளிப்பாடாக கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி கடலையூர் ரோட்டில் நடந்திருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் ஆறுமுகப் பாண்டியன், ஒன்றிய மாணவரணிச் செயலாளர் செண்பகராமன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. இளைஞர் பாசறை நகரச் செயலாளர் பாலாஜி, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் கவுசல்யா, ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் நடராஜன் அ.தி.மு.க. மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சியால் நீக்கப்பட்ட மாவட்ட ‘ஜெ’ பேரவை இணைச் செயலாளர் ரூபவேலனும் அழைக்கப்பட்டு அவரும் கலந்துகொண்டார்.

 

கூட்டத்தில், "அ.தி.மு.க. பொதுச் செயலாளரான சசிகலா தொடர்ந்து நீடிக்க வேண்டும். அவரது தலைமையில் அ.தி.மு.க இயங்க வேண்டும். அ.தி.மு.க. தொண்டர்களிடம் சசிகலா தொலைபேசி மூலம் உரையாடிவரும் சூழலில் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கட்சியை விட்டு நீக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர் செல்வம் ஆகியாரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பது" என்றும், "கட்சி அடிப்படை விதிகளுக்கு மாறாகத் தொடர்ந்து இந்த நிலை நீடிக்குமேயானால் எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்காகத் தொண்டர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்" என்றும் தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவினரின் இந்த தீர்மானங்கள் அக்கட்சிக்குள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.