இடைத்தேர்தல் குறித்து ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை

இடைத்தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவு தொடர்பாகஅக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

E.R.Eswaran

அதில்,''நடக்க இருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைதேர்தலில் திமுக வேட்பாளருக்கும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவளிக்கிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும்.'' இவ்வாறு கூறியுள்ளார்.

byelection E.R.Eswaran
இதையும் படியுங்கள்
Subscribe