கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வில் தனித்தன்மையோடு வலம் வருபவர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு. மாவட்டச் செயலாளராக இருந்த அவரை, தலைமை நிலையச் செயலாளராக்கி சென்னைக்கு அழைத்துக்கொண்டது தி.மு.க. தலைமை.
நேரு அடிக்கடி சென்னை சென்றுவிடுவதால் திருச்சியில் கட்சிக்காரர்களை சந்திப்பதிலிருக்கும் சிரமத்தைத் தவிர்க்க, அவரது மகன் அருணை அரசியலுக்கு கொண்டுவரவேண்டும் என்று நேரு ஆதரவாளர்கள் விருப்பப்பட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் அருண் சமீபத்தில் திருச்சி தி.மு.க. தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வந்து கட்சியினரை சந்தித்தது ஆச்சரியம் கலந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. கே.என்.நேரு கலந்து கொள்ளவேண்டிய நிகழ்ச்சிகள் அனைத்திலும் அருண் கலந்துகொண்டார். உடன் தி.மு.க. மாநகர செயலாளர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி ஆகியோர் உடன்சென்றனர். அருணை வரவேற்று திருச்சி மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
காடு வெட்டி தியாகராசன், அன்பில் மகேஷ், வைரமணி என திருச்சிக்கு மூன்று மா.செ.க்களை தலைமை நியமித்துள்ள நிலையில், நேருவின் மகன் அருணின் திடீர் அரசியல் பிரவேசம் திருச்சி தி.மு.க.வினரிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
-தாவீதுராஜ்