Skip to main content

“உழைப்பவனுக்கு உதை, உறங்குபவனுக்கு மகுடம் அளிப்பதுதான் பாஜகவின் குணம்” - நாஞ்சில் சம்பத் தாக்கு!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

"Kicking the working man, giving the crown to the sleeping man is the nature of the BJP" - Sampath imp

 

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகனை மத்திய அமைச்சராக நியமித்ததை அடுத்து அண்ணாமலையை தமிழ்நாடு மாநிலத் தலைவராக பாஜக தலைமை நியமித்துள்ளது. இதுகுறித்து திராவிட இயக்கப் பேச்சாளரும், சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். அவரது பதில்கள் பின் வருமாறு...

 

மோகன் ராஜலு, ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன, சி.பி. ராதாகிருஷ்ணன், ராகவன், கோவை முருகானந்தம், இல. கணேசன் என பல தலைவர்கள் தமிழக பாஜகவில் இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்துள்ளனர். அதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

உழைப்பவனுக்கு உதையும், உறங்குபவனுக்கு மகுடமும் அளிப்பதுதான் பாஜகவின் நியாயம். அந்தக் கட்சியில் உழைத்தவர்கள் லால் கிருஷ்ணா அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, எஸ்.வி. சின்ஹா என பலர் உள்ளனர். இதில் லால் கிருஷ்னா அத்வானி ரத யாத்திரையைத் துவங்கியவர், கரசேவை இயக்கத்திற்கு முகம் தந்தவர், பாபர் மசூதியை உடைத்தெறியும் வேள்வியில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வீதியில் நின்றவர். உமா பாரதி மற்றும் கட்சிக்கு சித்தாந்த பலம் தந்த பேராசிரியராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, ஆட்சியராக இருந்த எஸ்.வி. சின்ஹா இவர்களை எல்லாம் பலிகொடுத்த கட்சிதான் அந்தக் கட்சி.

 

இதிலிருந்து தெரிகிறது, உழைப்பவனுக்கு உதையும் உறங்குபவனுக்கு மகுடமும் கொடுத்து அழகு பார்க்கிற கட்சிதான் பாஜக. இன்று அமித்ஷா போன்றவர்களின் கையில் அந்தக் கட்சி சிக்கியிருக்கிற காரணத்தினால் உழைப்பவன் நிராகரிக்கப்பட்டு ரத்தக் கண்னீர் சிந்துகிறான். மோகன் ராஜலு போன்றவர்களெல்லாம் கட்சிக்காக நிறைய தியாகம் செய்தவர்கள். காயம்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி, அவர் உயிர் பிழைத்ததே புண்ணியம் என்று கருதுகிறது அவரது குடும்பம். ஆனால், அவருக்கு கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பொறுப்பும் இல்லை. அதேபோல் அண்ணன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லை.

 

இவர் இரண்டு முறை வாஜ்பாய் கேபினட்ல இருந்தவர், மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஆனால் தொகுதி கொடுக்கவில்லை. இப்போது இடைத்தேர்தல் வந்தபோது தொகுதி கொடுத்தார்கள், ஆனால் தோற்றுப்போனார். கேரளாவில் ஒரு இடத்திலும் பாஜக வெற்றிபெறாமல் துடைத்தெறியப்பட்டது. ஆனால் அங்கு இருக்கிற முரளிதரனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்திருக்கிறது. வெற்றிபெறாத முரளிதரனுக்கு வாய்ப்பு கொடுத்த நீ, ஏன் தமிழகத்தில் அண்ணன் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை? ஆகவே உழைப்பவர்களை உதாசீனம் செய்வதும், விளம்பர பிரியர்களையும், வித்தாரக் கள்ளர்களையும் தூக்கி உயர வைத்துக் கொண்டாடுவதும் பாஜகவின் குணம். இவர்கள் தீ வைத்துக் கொளுத்தினாலும் திருந்தமாட்டார்கள். அதனால் பாஜகவில் உழைப்பவர்கள் எல்லாம் நெஞ்சுடைந்து போயிருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.