சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி,மாட்டாங்குப்பம் பகுதியில், முன்னாள் கர்நாடகா அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி. ரவியும், நடிகைகுஷ்புசுந்தரும்மீனவர் கிராம மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டனர். அங்கு வருகை புரிந்த மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டனர்.