2 கவுன்சில்களை மட்டும் வைத்திருந்த பாமக கீரப்பாளையம் ஒன்றியத்தை கைப்பற்றியது

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அதிமுக பெரும்பான்மை வைத்திருந்த நிலையில், கீரப்பாளையம் ஒன்றியம் 9-வது வார்டில் போட்டியிட்ட கனிமொழி என்பவரின் கணவர் பாட்டாளி மக்கள் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ளார்.

cuddalore district -

இவர் கட்சியின் தலைவர் ராமதாஸ் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுத்து கீரப்பாளையம் ஒன்றியத்தை பாமகவிற்கு விட்டு தர வேண்டுமென வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பாமகவுக்கு 2 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அதிமுகவில் வெற்றி பெற்ற கவுன்சில்கள் மற்றும் சுயேச்சைகள் 9 பேர் பாமக சார்பில் போட்டியிட்ட கனிமொழிக்கு ஆதரவு அளித்ததால் வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராவுக்கு 4 வாக்குகள் பதிவாகியது. அதே நேரத்தில் துணைத் தலைவர் பதவிக்கு அதிமுக போட்டியிடுகிறது. ஒன்றியக்குழு தலைவர் பதவியை எண்ணி பல லட்சங்களை செலவு செய்த அதிமுக ஒன்றிய செயலாளர் விநாயகம் கடும் மன வருத்தத்தில் உள்ளார். இவரை கட்சியினர் தேற்றி வருகிறார்கள்.

chairman post Cuddalore district pmk
இதையும் படியுங்கள்
Subscribe