Skip to main content

“கே.சி.ஆர். காங்கிரஸாருடன் பேசியிருக்கிறார்” - உண்மையை உடைத்த டி.கே. சிவக்குமார்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“K.C.R. has spoken to the Congress” - D.K. Sivakumar who broke the truth

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு அதன்படி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அண்மையில் நடைபெற்ற நிலையில், கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி தெலங்கானா மாநில தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று முடிந்த 5 மாநிலத் தேர்தலின் கருத்துக்கணிப்புகளும் அன்று மாலையில் இருந்து வெளி வரத் தொடங்கின. 

 

கருத்துக்கணிப்பில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்படுகிறது. மிசோரத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் இசட்.பி.எம் எனும் மாநில கட்சி ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஐந்து மாநிலத் தேர்தலில், மிசோரம் தவிர்த்து மற்ற நான்கு மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை நாளை (டிசம்பர் 3ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன. மிசோரம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை டிச. 4ம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டத்தில் இருந்து இருமுறை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் முதல்வர் கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ். இந்த முறை தோல்வியைத் தழுவலாம் எனச் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அங்கு குதிரை பேரம் மற்றும் கட்சித் தாவல்கள் நடைபெறலாம் எனக் காங்கிரஸ் தரப்பில் யூகித்து, தெலுங்கானாவில் வெற்றிபெறும் எம்.எல்.ஏ.க்களை வேறு மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெலுங்கானா மாநிலத்திற்கு இன்று சென்றுள்ளார். 

 

“K.C.R. has spoken to the Congress” - D.K. Sivakumar who broke the truth

 

முன்னதாக கர்நாடகாவில், டி.கே. சிவக்குமார் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், “பி.ஆர்.எஸ். எங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளன. குறிப்பாக முதலமைச்சரான கே.சி.ஆர். அவராகவே எங்கள் கட்சியினருடன் நேரடியாகப் பேசியதாக எங்கள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

 

இது என் கட்சி அதன் காரணமாக நான் தெலுங்கானாவிற்கு செல்கிறேன். கர்நாடகா தேர்தலின்போது, தெலுங்கானா காங்கிரஸ் முழுவதுமாக எங்களுடன் இருந்தது. அதனால், தற்போது அங்கு நான் செல்கிறேன். தேர்தல் முடிவுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். எங்கள் கட்சி வெற்றி பெறும் என்பது உறுதி அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.