Skip to main content

மாறுபட்ட தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது ஏன்? கே. பாலகிருஷ்ணன் கேள்வி 

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
k.balakrishnan cpim


 

சபாநாயகர்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மாறுபட்ட தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் திறக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை அப்புறப்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கொறடாவின் உத்தரவை மீறியதால் தற்போதைய தமிழக துணை முதலமைச்சர் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென மற்றொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 
 

திமுக சார்பில் தொடுக்கப்பட்ட இவ்விரண்டு வழக்குகளிலும் பல மாதங்கள் விசாரணைக்குப் பிறகு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்விரண்டு வழக்குகள் சம்பந்தப்பட்ட விபரங்கள் தனித்தனியானது என்ற போதிலும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் சில கேள்விகளை எழுப்புகின்றன. “சபாநாயகரின் அதிகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது, சபாநாயகரின் அதிகார வரம்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்குகளில் எந்த முடிவும் நாங்கள் எடுக்க முடியாது” என மனுதாரர்களது மனுக்களை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் புதுச்சேரி சம்பந்தப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு  மாறுபட்ட தீர்ப்பினை கடந்த மாதம் வழங்கியது பல கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. 
 

புதுச்சேரி மாநில அரசின் பரிந்துரையும் இல்லாமல், அரசுடன் கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் மூன்று பிஜேபி பிரமுகர்களை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இவர்களது நியமனத்தை ஏற்க முடியாது என புதுச்சேரி சபாநாயகர் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்தார். இப்பிரச்சனை தொடர்பான வழக்கில் சபாநாயகருக்கு அவ்வாறு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி, அவரது உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 

சபாநாயகர்களின் அதிகாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மாறுபட்ட தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
 

மேலும் சபாநாயகரது அதிகாரம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், தொடுக்கப்பட்ட வழக்குகளை ஏற்றுக்கொண்டது ஏன்,  இவ்வளவு தாமதமாக தீர்ப்பு வழங்கியதும் ஏன் என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளன. 
 

ஜனநாயக அமைப்பில் உயர்வான இடத்தில் உள்ள நீதித்துறை இத்தகைய ஐயங்களுக்கு இடமளிக்காமல் இருக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கூறியுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.