ADVERTISEMENT

காவிரி பிரச்சன்னைக்கு நாளை இறுதி தீர்ப்பு

01:15 PM Feb 15, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


காவிரி சம்பந்தமான அனைத்து வழக்குகளுக்கும் நாளை தீர்ப்பு என தகவல். நாளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு நடுவர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு192 டி.எம்.சி ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி, கேரளாவிற்கு 30 டி.எம்.சி ,பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி என பிரித்து வழங்கப்பட்டது. ஆனால் நடுவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் மேல் முறையீடு செய்தன . நாளை தீர்ப்பு என்ற அறிவிப்பு கர்நாடக,தமிழக எல்லைகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவ வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையேயான காவிரி பிரச்சன்னைக்கான தீர்வு நாளை கிட்டிவிடும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT