Kathir-Anand

Advertisment

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.