Advertisment

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடிய 370, மற்றும் 35ஏ சட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பை எதிர்த்தும், காஷ்மீரில் அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல சமூக நீதி கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மு.தமிமுன் அன்சாரி மற்றும் சு.ப.வீரபாண்டியன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றனர்.