Skip to main content

செந்தில்பாலாஜி செம கடுப்பில் இருந்தால் தான் நல்லது –அன்பில் மகேஷ்

Published on 16/09/2019 | Edited on 16/09/2019

 

உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் இளைஞர் அணி உறுப்பினர்களை நேர்காணல் செய்து பொறுப்பாளர்களை நியமிக்கிறேன் என்று சில ஊர்களுக்கு நேரடியாக சென்று நேர்காணல் நடத்தினார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தீடீரென இளைஞர் அணி மண்டல பொறுப்பாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் இளைஞர் அணியில் உறுப்பினர்களை இரண்டு மாதத்தில் சேர்க்க வேண்டும். இப்போது இருக்கும் இளைஞர் அணி நிர்வாகிகளை மாற்ற வேண்டாம். அப்படி மாற்றினால் தேர்தலில் அது நமக்கு சரியாக இருக்காது என்று உறுப்பினர் சேர்க்கையை தமிழகம் முழுவதும் துரிதப்படுத்தி சென்னையில் இருந்தே வீடியோ கான்பிரன்சில் பேசி உற்சாகப்டுத்தி வருகிறார்.

 

karur dmk



சமீபத்தில் செந்தில்பாலாஜி, இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கைக்கு கரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மையங்களை ஏற்படுத்தியிருருந்தார். கரூர் 80 அடி சாலையில் மிகப் பிரமாண்டமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
 

இதை துவக்கி வைத்து பேசிய திருச்சி திருவரம்பூர் எம்.எல்.ஏவும், இளைஞர் அணியின் மாநில துணை செயலாளரும், இளைஞர் அணி மண்டல பொறுப்பாளருமான அன்பில் மகேஷ், இளைஞரணி மண்டல பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டு உள்ளேன். அதனால் செந்தில் பாலாஜி என் மீது செம கடுப்பில் மிகவும் கோபத்தில் இருப்பதாக செய்திகள் பரபரப்பாக வெளிவந்தது. நீங்கள் என் மீது கடுப்பில் இருக்கிறீர்களா? என்று செந்தில்பாலாஜியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் சிரித்தார். ஆனால் செந்தில்பாலாஜி கடுப்பாக தான் இருக்கிறார்.


 

 

முதன்முறையாக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் போட்டபோது, தொகுதிக்கு பத்தாயிரம் பேரை சேர்க்க வேண்டும் என்று இளைஞரணி செயலாளர் கூறியபோது அதையும் தாண்டி 15,000 உறுப்பினர்களை சேர்ப்பேன் என்று செந்தில்பாலாஜி சொன்னார். அப்போதும் அவர் கடுப்பாக இருப்பதை கண்டேன்.
 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இடத்தை தூர்வாரும் பணியை செய்து முடித்தால் கரூர் மாவட்டத்தில் மூன்று இடத்தில் தூர்வாரும் பணிகளை செய்வோம் என்று கூறி ஏற்பாடுகளைச் செய்தார். அப்போதும் அவர் கடுப்பில் இருப்பதை நான் அறிந்தேன். செந்தில் பாலாஜி எப்போதும் கடைசிவரை கடுப்பாக இருக்க வேண்டும். அவர் கடுப்பாக இருந்தால்தான் கட்சிக்கு மிகவும் நல்லது என பேசினார்.


 

 

கரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளவரசு மற்றும் நன்னீயூர் ராஜேந்திரன், கரூர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் கரூர் மாவட்டம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கூட்டம் ஏதோ மாநாடு இளைஞர்கள் பட்டாளம் குவிந்து இருந்தது. கரூர் மாவட்டத்தில் நடந்த 5 இடங்களில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில் மொத்தம் 5420 பேரை சேர்த்து இருந்தது குறிப்பிடதக்கது. இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை படுவேகமாக சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.