Skip to main content

உளவு சொன்ன கோழி செந்தில்..? கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி...

Published on 04/12/2019 | Edited on 04/12/2019
senthil



கரூர் மாவட்ட திமுகவில் வாசுகி முருகேசனுக்கு பிறகு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் நன்னீயூர் ராஜேந்திரன். இவருக்கு வலது கரமாகவும், உதவியாளராகவும் இருந்தவர் கோழி செந்தில். இவரை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப அணியின் கரூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கட்சியின் உள்ளாட்சி தேர்தல் குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கடுமையாக பேசின பேச்சு கட்சியினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

senthil


 

''நாம் எதிரியை கூட களத்தில் நேருக்கு நேர் சந்தித்து சண்டை போடலாம். ஆனால் கூடவே இருந்து எதிரிக்கு உளவு சொல்லும் துரோகியை நாம் விட்டு வைக்கவே கூடாது. அவர்கள் இந்த வேலைக்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம். இடைத்தேர்தலில் நாம் நடத்திய அத்தனை ரகசிய கூட்டத்தையும் நம்முடைய தேர்தல் வெற்றிக்கு வகுத்த திட்டங்கள் அத்தனையையும் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து எதிரிகளுக்கு அப்படியே அனுப்பியிருக்கிறார். இதை கண்டுபிடித்து விட்டேன். அவரை கட்சியை விட்டே நீக்க சொல்லி எழுதியிருக்கிறேன்'' என்றார். அதன் வெளிப்பாடு தான் கோழி செந்தில் நீக்கம் என்கிறார்கள்.
 

செந்தில்பாலாஜியின் இந்த பேச்சுக்கு பிறகு கோழி செந்தில் கட்சி அலுவலகம் பக்கம் வராமல் தவிர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இந்த விடுவிப்பு என்கிறார்கள்.

 

senthil


 

கோழி செந்தில் குறித்து நாம் விசாரித்தபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளாக இருந்த நன்னீயூர் ராஜேந்திரனின் உதவியாளராக இருந்தார் கோழி செந்தில். கட்சியில் மாவட்ட செயலாளர் தேர்தல் நடந்தபோது, கரூர் சின்னசாமி அதற்கு போட்டியிட்டார். அப்போது, நன்னீயூர் ராஜேந்திரன் என்ன என்ன திட்டம் வகுக்கிறார் என்பதை அப்போதே ரகசியமாக உளவு பார்த்து கரூர் சின்னசாமிக்கு தகவல் சொல்லியவர்தான் கோழி செந்தில் என்கிறார்கள்.
 

கட்சியின் அலுவலகத்தை மதிய நேரங்களில் தவறான விசயங்களுக்கு பயன்படுத்தி கையும் களவுமாக பிடிப்பட்ட போதும் நன்னீயூர் ராஜேந்திரன் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கவனமாக தவிர்த்து வந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மாவட்ட பொறுப்பாளர் ஆன பின்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் நடத்திய ரகசிய கூட்டங்கள் அனைத்தையும் வீடியோ, டாக்குமெண்டுகளை அனுப்பியிருக்கிறார்.


 

இதை எப்படி செந்தில்பாலாஜி கண்டுபிடித்தார் என்று நாம் விசாரித்த போது, அதிமுக அமைச்சருடன் இருந்து கொண்டு அங்கிருந்து உளவு பார்த்து செல்லும் அதிமுக நிர்வாகி ஒருவர் தான் செந்தில்பாலாஜியிடம் போட்டு கொடுத்து விட்டார் என்கிறார்கள்.
 

அரசியலில் நேரடியான அரசியலை விட உள் அரசியல்களை மிக கவனமாக கையாள வேண்டும் என்பதை கோழி செந்தில் நீக்கம் கட்சியிருக்கு உணர்த்தியிருக்கிறது என்கிறார்கள் கரூரில் உள்ள திமுக முக்கிய நிர்வாகிகள்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.