Skip to main content

கூவத்தூரில் இட்லி, சட்னி சாப்பிட்டதைத்தான் கருனாஸ் வெளியிட முடியும்: அமைச்சர் கிண்டல் பேச்சு

Published on 03/10/2018 | Edited on 03/10/2018
karunas actor



நாகை மாவட்டம் வடவூர் கிராமத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூட கட்டிடத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் திறந்து வைத்தார். 
 

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், "நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற எண்ணத்தில் இல்லாமல் விவசாயிகள் அனைவரும் வாங்கிய கடனை முறையாக செலுத்த வேண்டும். என்றார். 
 

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ்.மணியன், "மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்த ஒரு அனுமதியையும் வழங்கியது இல்லை. மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பல திட்டங்களை மாநில அரசு ரத்து செய்துள்ளது என்றார்.

 

os manian


 

மேலும், இடங்களை சேட் லைட் மூலம் மத்திய அரசு தேர்வு செய்வதாக விமர்சித்த ஓஎஸ்.மணியன், மாநில அரசு அனுமதி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியும் என்று கூறினார். 
 

ஆதாரத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்று  கருணாஸ்  கூறியுள்ளது குறித்து பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி, சாப்பாடு சாப்பிட்ட ஆதாரம் மட்டுமே கருணாஸிடம் உள்ளது என்றும், இந்த ஆதாரங்களை வெளியிடட்டும் என்றும் கிண்டலடித்து பேசினார். 
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘துரோக அதிமுக; பாசிச பாஜக; இதுதான் சரியான நேரம்’ - கருணாஸ் எடுத்த முடிவு

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Treacherous AIADMK; Fascist BJP'; This is the right time' - Karunas decided

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பாஜக கூட்டணியில் தற்போது வரை ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணியாக இணைய வேண்டியிருக்கிறது. பாஜக வென்றால் மோடி ஆட்சி இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” - கருணாஸ் மீண்டும் புகார்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
karunas compalint against bayilvan ranganathan regards trisha admk av raju issue

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். மேலும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்த த்ரிஷா, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். இதையடுத்து முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இதனிடையே த்ரிஷாவிற்கு ஆதரவாக சேரன், ஃபெப்சி அமைப்பு, மன்சூர் அலிகான், விஷால், தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். இதையடுத்து ஏ.வி ராஜுக்கு த்ரிஷா தரப்பில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து கருணாஸ், தன் மீது வன்மம் கொண்டு அவதூறு மற்றும் அருவருக்கத்தக்க வகையில் பொய்யான தகவலை பரப்பி வந்த அரசியல் கட்சி சார்ந்த ஏ.வி ராஜூ மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் செய்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். யூடியூப் சானலில் தவறான தகவலை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பல யூடியூப் சானல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷ்னரிடம் கருணாஸ் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருகின்றனர். எந்த ஆதாரமும் இன்றி பரப்பப்படும் பொய்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் விளம்பரத்துக்காக பொய்யான செய்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.