Karti Chidambaram MP meets Prime Minister Modi

சிவகங்கை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை இன்று (28.03.2025) சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிகரித்து வரும் தெருநாய்களால் ஏற்படும் உடல்நல பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கவலைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, இன்று நாடாளுமன்றக் கட்டட அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்தேன்.

Advertisment

உலகளவில் மிகப்பெரிய தெருநாய் எண்ணிக்கையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் ரேபிஸ் பொதுவானதாக உள்ளது. உலகின் ரேபிஸ் தொடர்பான இறப்புகளில் 36% இந்தியாவால் ஏற்படுகிறது. விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், அதன் செயல்படுத்தல் பயனற்றதாகவே உள்ளது. தற்போதைய அமைப்பின் போதாமை குறித்து நான் கவலைகளைப் பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.

Advertisment

மேலும் உள்ளூர் அமைப்புகளிடம் இந்தப் பிரச்சினையைத் திறம்படச் சமாளிக்க வளங்கள், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை. அவசர நடவடிக்கை தேவை என்பது தெளிவாகிறது. உள்ளாட்சி அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி, முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் தீர்வை வழங்குவதற்காக ஒரு தேசிய பணிக்குழுவை நிறுவ நான் பரிந்துரைத்தேன். கூடுதலாக, இந்த சவாலை எதிர்கொள்ள பிரத்தியேக தங்குமிடங்களும் (வீடுகளும்) நீண்டகால திட்டமும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.