Skip to main content

கனிமொழியின் கோரிக்கையை நிறைவேற்றிய மோடி!    

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


தமிழகத்தின் தூத்துக்குடி விமான நிலையம் உட்பட இந்தியாவில் 5 விமான நிலையங்களைத் தரம் உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம், எதிர்காலத்தில் பல தரப்பட்ட விமான சேவைகளும், பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என வர்த்தகத்துறையினர் தெரிவிக்கின்றனர். 
                        

இந்திய அளவில் தூத்துக்குடி விமான நிலையம் நான்காம் நிலையில் இருந்து வந்தது. இதனால், விமான சேவைகளில் பல தடங்கல்கள் இருந்தன. இந்தச் சூழலில், தூத்துக்குடி விமான நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பிரதமர் மோடியிடமும், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்திடமும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் திமுக எம்.பி.கனிமொழி. 
                       

கடந்த ஜனவரி மாதம் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டது விமானப் போக்குவரத்து அமைச்சகம். அந்த ஆய்வுகளில் இந்தியாவின் 5 விமான நிலையங்களைத் தரம் உயர்த்த ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அது குறித்த முடிவுகளை எடுப்பதற்குள் கரோனா விவகாரம் தலைதூக்கியதால் விமான நிலையங்களைத் தரம் உயர்த்தும் விவகாரம் கிடப்பில் விழுந்தது. 
                   

http://onelink.to/nknapp


இந்தச் சூழலில், மத்திய அமைச்சரவையின் கடந்த கூட்டத்தின்போது இது குறித்தும் விவாதித்துள்ளார் பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து விமான நிலையங்களைத் தரம் உயர்த்த ஒப்புதல் தந்திருக்கிறார் பிரதமர். ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், தமிழகத்திலுள்ள தூத்துக்குடி, உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் மற்றும் ப்ரயாக்ராஜ், கர்நாடகாவிலுள்ள ஹூப்ளி, மத்திய பிரதேசத்திலுள்ள ஜபல்பூர் ஆகிய 5 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.    

 

Kanimozhi

 

’’விமான நிலையங்கள் தரம் உயர்த்துவதன் மூலம் அந்த நிலையங்கள் அமைந்துள்ள மாவட்டங்களிலும், அதனருகில் இருக்கும் மாவட்டங்களிலும் வர்த்தக வளர்ச்சி விரிவடையும். விமான சேவைகள் அதிகரிக்கும். இதுவரை இரவு நேரங்களில் தூத்துக்குடிக்கு விமான சேவை இல்லை. இனி, அந்த சேவைகள் கிடைக்கும். வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்கு நேரடியாக தூத்துக்குடியிலிருந்து செல்வதற்கான விமான சேவைகள் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் சர்வதேச விமானங்கள் இங்கு வந்து போவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். விமான போக்குவரத்து எளிமையாகவும் அதிக அளவிலும் இருக்கும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் புதிய புதிய தொழில் நிறுவனங்கள் அமைவதற்கு உதவும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் பெருகும்’’ என்கிறார்கள் வர்த்தகத்துறையினர்.  
     
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய ராக்கெட் ஏவுதளம் திட்டத்தைத் தனது மாநிலத்துக்கு கொண்டு செல்ல காய்களை நகர்த்தியிருந்தது கேரளா. அதனை முறியடிக்கும் வகையில், புதிய ராக்கெட் ஏவுதளம் திட்டத்தைத் தூத்துக்குடியிலுள்ள குலசேகரப்பட்டணத்தில் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் திமுக எம்.பி.கனிமொழியும், தெலுங்கான மாநிலத்தின் தற்போதைய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனும் தீவிர முயற்சி எடுத்தனர். அவரகளின் முயற்சி காரணமாக குலசேகரப்பட்டணத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு மத்திய மோடி அரசு அனுமதியளித்தது. அந்தத் திட்டத்தின் பணிகள் நடந்து வருகின்றன. 
                       

புதிய ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியினூடாகவே தூத்துக்குடி விமான நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்கிற முயற்சியையும் எடுத்திருந்தார் கனிமொழி. தற்போது இதனையும் நிறைவேற்றித் தந்துள்ளது மோடி அரசு.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.