Skip to main content

கனிமொழியின் கோரிக்கையை மோடி ஏற்றார்! எடப்பாடி ஏற்பாரா? -ராக்கெட் ஏவுதளம் விவகாரம்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

                   

Kanimozhi


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) அமைக்கவிருக்கும் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்காக ஒப்படைக்கப்படும் நில எடுப்புப் பணிகளை ஆய்வு செய்திருக்கிறார் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி.


                    
இஸ்ரோ அமைக்கும் ராக்கெட் ஏவுதளத்தை எப்படியாவது தங்களது மாநிலத்துக்கு கொண்டு சென்று விட வேண்டும் என துடித்தது கேரள அரசு. இதற்காக தங்களின் அனைத்து அரசியல் வலிமையையும் கேரள அரசு பயன்படுத்தியது. இதனையறிந்து, கேரள அரசின் முயற்சிகளை உடைத்து, ராக்கெட் ஏவுதளத்தை குலசேகர பட்டணத்துக்குக் கொண்டு வந்ததில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு அதிக பங்குண்டு. அவரின் முயற்சியினாலேயே இந்தத் திட்டம் தென் தமிழகத்துக்குக் கிடைத்தது.

 

ஏவுதளம் அமைவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ‘’ராக்கெட் ஏவுதளத்திற்காக 2,500 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, நில எடுப்புப் பணிகள் 8 பிரிவுகளாக நடக்கிறது. முதல் கட்டமாக 4 பிரிவுகளை உள்ளடக்கிய நில எடுப்புப் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. அவைகள் முடிந்ததும் இஸ்ரோவிடம் நிலத்த ஒப்படைப்போம்’’ என்றார். 

 

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் போது, நேரடியாக 1,000 பேருக்கும் மறைமுகமாக 5,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதற்கிடையே, குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் நிலையில், ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அப்பகுதியில் அமைவது தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என மத்திய அரசிடமும் தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார் கனிமொழி. 

 

குறிப்பாக, ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாங்குநேரி சிறப்பு பொருதார மண்டலத்தில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும். உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அமைவதன் மூலம் நேரடியாக 15,000 பேர்களுக்கும், மறைமுகமாக 30 ஆயிரம் பேர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி அதிகரிப்பதுடன், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழக இளைஞர்களின் அவலங்கள் தடுக்கப்படும். மேலும், தென் தமிழகத்தில் நடக்கும் சாதி மோதல்களும் ஒழிக்கப்படும் நிலை உருவாகும். தொழில் நிறுவனங்கள் வருவதினால் இத்தனை நன்மைகள் நடக்கும் என்பதால் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் காலியாக இருக்கும் நிலங்களை ராக்கெட் உதிரிபாகஙள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே கனிமொழியின் கோரிக்கையாக இருக்கிறது.      

 

இந்த நிலையில், இதே கோரிக்கையுடன் தமிழக அரசை அணுகியுள்ளது இஸ்ரோ. இது குறித்து தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள இஸ்ரோ அதிகாரிகள், ‘’நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள 2,500 ஏக்கர் நிலத்தில் 1,500 ஏக்கர் நிலங்களை ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்‘’ எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

http://onelink.to/nknapp


                  
கனிமொழியின் கோரிக்கையை ஏற்று குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உத்தரவிட்டார் பிரதமர் மோடி! அதேபோல ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நாங்குநேரியில் இடம்தர வேண்டும் என்கிற கோரிகையை எடப்பாடி ஏற்பாரா? என்கிற கேள்வி தமிழக தொழில் நிறுவனங்களிடம் எதிரொலிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.