Skip to main content

கனிமொழியின் கோரிக்கையை மோடி ஏற்றார்! எடப்பாடி ஏற்பாரா? -ராக்கெட் ஏவுதளம் விவகாரம்!

Published on 18/06/2020 | Edited on 18/06/2020

 

                   

Kanimozhi


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ) அமைக்கவிருக்கும் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்காக ஒப்படைக்கப்படும் நில எடுப்புப் பணிகளை ஆய்வு செய்திருக்கிறார் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி.


                    
இஸ்ரோ அமைக்கும் ராக்கெட் ஏவுதளத்தை எப்படியாவது தங்களது மாநிலத்துக்கு கொண்டு சென்று விட வேண்டும் என துடித்தது கேரள அரசு. இதற்காக தங்களின் அனைத்து அரசியல் வலிமையையும் கேரள அரசு பயன்படுத்தியது. இதனையறிந்து, கேரள அரசின் முயற்சிகளை உடைத்து, ராக்கெட் ஏவுதளத்தை குலசேகர பட்டணத்துக்குக் கொண்டு வந்ததில் தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு அதிக பங்குண்டு. அவரின் முயற்சியினாலேயே இந்தத் திட்டம் தென் தமிழகத்துக்குக் கிடைத்தது.

 

ஏவுதளம் அமைவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ‘’ராக்கெட் ஏவுதளத்திற்காக 2,500 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை இஸ்ரோவிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, நில எடுப்புப் பணிகள் 8 பிரிவுகளாக நடக்கிறது. முதல் கட்டமாக 4 பிரிவுகளை உள்ளடக்கிய நில எடுப்புப் பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. அவைகள் முடிந்ததும் இஸ்ரோவிடம் நிலத்த ஒப்படைப்போம்’’ என்றார். 

 

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் போது, நேரடியாக 1,000 பேருக்கும் மறைமுகமாக 5,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதற்கிடையே, குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் நிலையில், ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அப்பகுதியில் அமைவது தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என மத்திய அரசிடமும் தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார் கனிமொழி. 

 

குறிப்பாக, ராக்கெட் ஏவுதளம் அமையவிருக்கும் பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாங்குநேரி சிறப்பு பொருதார மண்டலத்தில் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும். உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அமைவதன் மூலம் நேரடியாக 15,000 பேர்களுக்கும், மறைமுகமாக 30 ஆயிரம் பேர்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அப்போது, தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி அதிகரிப்பதுடன், வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழக இளைஞர்களின் அவலங்கள் தடுக்கப்படும். மேலும், தென் தமிழகத்தில் நடக்கும் சாதி மோதல்களும் ஒழிக்கப்படும் நிலை உருவாகும். தொழில் நிறுவனங்கள் வருவதினால் இத்தனை நன்மைகள் நடக்கும் என்பதால் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் காலியாக இருக்கும் நிலங்களை ராக்கெட் உதிரிபாகஙள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே கனிமொழியின் கோரிக்கையாக இருக்கிறது.      

 

இந்த நிலையில், இதே கோரிக்கையுடன் தமிழக அரசை அணுகியுள்ளது இஸ்ரோ. இது குறித்து தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள இஸ்ரோ அதிகாரிகள், ‘’நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள 2,500 ஏக்கர் நிலத்தில் 1,500 ஏக்கர் நிலங்களை ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்‘’ எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

http://onelink.to/nknapp


                  
கனிமொழியின் கோரிக்கையை ஏற்று குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய உத்தரவிட்டார் பிரதமர் மோடி! அதேபோல ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நாங்குநேரியில் இடம்தர வேண்டும் என்கிற கோரிகையை எடப்பாடி ஏற்பாரா? என்கிற கேள்வி தமிழக தொழில் நிறுவனங்களிடம் எதிரொலிக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.