Skip to main content

காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதில் பாராபட்சம் நிலவுகிறது... காஞ்சிபுரம் எம்எல்ஏ

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாநில மாணவர் அணி செயலாளருமான வக்கீல் எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதில் பாராபட்சம் நிலவுகிறது. காஞ்சிபுரம் பொதுமக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதத்தில் அடையாளமாக கடை அடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் அரசின் கவனத்தை ஈர்க்கும் முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். 

 

kanchipuram



அரசு போராட்டத்தின் நியாயத்தை கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை சமமாக பிரிக்க வேண்டும். ஒருங்கிணைந்த மாவட்டம் பிரிக்கப்படும் போது, கடைப்பிடுக்கபடும் அடிப்படை நியாயத்தின்படி புதியதாக உருவாக்கப்படும் மாவட்டத்தை விட ஏற்கனவே உள்ள மாவட்டம் எந்த வகையிலும் சிறுமைப் படுத்தாமல் அக்கறையுடனும் கவனத்துடனும் பிரிந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
 

அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மண்ணை சிறுமைப்படுத்தாமல், கூடுதல் பகுதியை திரும்ப அளித்து அறம் செய்யுமா அரசு என்று காஞ்சி எதிர்பார்க்கப்படுகிறது.
 

 மாவட்ட தலைநகராக காஞ்சிபுரம் நகரம் என்ற தகுதி பெற்று 52 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் மாவட்ட தலைமை நகருக்கு வர வேண்டிய அரசு அலுவலகங்கள், கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாக பெறாமல் கடந்துவிட்டது. 
 

மாவட்ட நீதிமன்றம் தலைநகர் காஞ்சிபுரம் வேண்டும் என்று ஓராண்டு போராடி 2009 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம்-2 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அரசால் வழங்கப்பட்டது.
 

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக விளங்கிய காஞ்சி மண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு என்றாலும், பல்லவ பேரரசின் தலைநகராக விளங்கி அதன் துறைமுகமாக மல்லையும் மாவட்ட எல்லையில் ஒன்று கடற்கரை எல்லையும்,சிறப்பு பகுதி யாக பல்லவபுரம் நகரமும் ஒன்றாகக் கொண்டு விளங்கிய மாவட்டம், தற்போது மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிகச் சுருங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த அரசு இனியாவது இதை கருத்தில் கொண்டு மாவட்ட எல்லையில் மாற்றம் செய்து நாளை அறிவிக்குமா? மாவட்ட தலைநகரான காஞ்சிபுரமத்தில் அரசின் அனைத்து துறைகளின் அலுவலகமும் அமைக்கப்பட்டு, அதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துமா?
 

 நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு வழங்க வேண்டிய அரசு மருத்துவக்கல்லூரி, சட்டக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடனடியாக அமைக்க அறிவிப்பாரா? 
 

சுற்றுலா அலுவலகம் ,வேளாண்மை பொறியியல் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம், நகர ஊரமைப்பு துறை மற்றும் புதுநகர் வளர்ச்சி குழுமம் போன்ற அரசு அலுவலகங்களை உடனடியாக அமைக்க அறிவிப்பாரா?
 

முழுமையான அதிகாரம் பெற்ற மாவட்ட நீதிமன்றம் அறிவித்து, அதற்கான புதிய கட்டிட வளாகம் கட்ட அறிவிப்பு வெளியிடுவாரா? 
 

மேலும் குடிநீர் பிரச்சினை தீர சாத்தனூர்- அரக்கோணம் குடிநீர் திட்டத்தில் காஞ்சிபுரத்திற்கு இணைப்பு தந்திட நான் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தருவாரா?
 

அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக அறிஞர் அண்ணாவின் கனவான காஞ்சிபரத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா ? அறிஞர் அண்ணா அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையை உலகத்தரத்தில் சிகிச்சை மையமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறுமா? 
 

இப்படி பல்வேறு வசதிகளுடன் மாவட்டத் தலைநகரமான காஞ்சிபுரத்தினை மேம்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் இயக்கமாகவும் ஏக்கத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ஆகவே நாளை முதல்வர் இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தை பொது மற்றும் இயற்கை நீதியுடன் சமமாகப் பிரித்து மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு கூறியுள்ளார்

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.