Advertisment

2019 மக்களவை தேர்தலிலும், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து, நடைபெறவுள்ள உள்ளாச்சி தேர்தலை கருத்தில் கொண்டு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். அதன்படி மீண்டும் ஜூன் 28 ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 72 க்கும் மேற்பட்ட ஊர்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. அவை அனைத்தையும் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கமல்ஹாசன் பார்வையிட்டார்.