Skip to main content

“திறவா நெடுங்கதவை பாடி திறந்தார் திருஞானசம்பந்தர்.. ஊழல் கோட்டையை உதைத்து திறக்க வேண்டும்” - கமல்ஹாசன்

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

kamalhasan speech at vetharanyam


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வேதாரண்யம் என்றாலே புகையிலையும், உப்பும்தான் நினைவுக்கு வரும். 

 


சுதந்திர போராட்டம் எனும்போது, தனியாக ஒரு உச்சநிலை மனிதர்கள் நடத்துவது மட்டும் அல்ல ஒரு சாமானியன் செய்யும் புரட்சியும் அதற்கு சான்றுதான் அதற்கு உதாரணம் தியாகி வைரப்பன் போர் குணம் கொண்டவர். தலைவர்கள் அவமதிக்கப்படுவதை, புளியம் கொம்பால் அடிக்கப்பட்டு தெருவில் இழுத்து செல்வதை பார்த்த அவர், தான் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். இனி வெள்ளையர்களுக்கும், வெள்ளையர்களிடம் வேலை பார்க்கும் எவருக்கும் நாவித தொழில் செய்வதில்லை என்றும், அதை கடைபிடிக்கிறார். ஆனால், அதை செய்கிறார். 

 

இவர் இன்னார் என்று தெரியாமல் ஒருவருக்கு சவரன் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் கேட்கிறார், ‘என்னப்பா வெள்ளையர்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் நீ சவரன் செய்ய மாட்டேன்..’ என்று கேட்டவுடன் அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகிறார். அதை ஒரு புகாராக நீதிபதி வரை செல்கிறது. நீதிபதி அவரை கூப்பிட்டு காசை வாங்கிக்கொண்டு பாதியில் ஒரு வேலையை விட்டு விட்டு செல்வது நியாயமில்லை. ஆதலால், நீ முடித்து கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு, வேண்டுமானால், நீங்கள் அந்த பாதி வேலையை பாருங்கள் என்று நீதிபதியை பார்த்து சொன்னார்.

 


அதற்காக அவருக்கு சிறை தண்டனையை கொடுத்தார் நீதிபதி. சுதந்திரம் நீங்கள் பிறக்கும் போது இருந்தது, அவர் பிறக்கும்போது சுதந்திரம் இல்லை. நீங்கள் அதை மறந்து விடாதீர்கள். ஆனால், நீங்கள் இன்றும் சுதந்திரம் இருப்பதாக நம்பி கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இல்லை. அதை மக்களுக்கே வாங்கி தரும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 


வெள்ளைக்காரர்கள் தெரியாமல் உப்பு வரி போட்டார்கள். இன்றும், அப்படி ஒரு உப்பு வரி போட்டு வைத்திருக்கிறார்கள். அதுதான் ஜி.எஸ்.டி.  அதைத்தான் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் களைய மக்கள் நீதி மய்யம் வேண்டும். இங்கே பல திட்டங்கள் இருக்கிறது. இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு திட்டம், திறமையை வளர்த்து கொள்ள தேவையான திட்டம், முன்கூட்டியே திட்டமிட்டு செய்யக்கூடிய அரசாக மக்கள் நீதி மய்யம் இருக்கிறது. 

 


நம்முடைய கட்சியின் பெருமை எதுவென்றால், தாய்மார்கள் நம்பி வந்து அமர்ந்து பேச்சை கேட்கிறார்களே அது தான். திறவா நெடுங்கதவை பாடி திறந்தார் திருஞானசம்பந்தர் வேதாரணீஸ்வரர் கோவிலில். ஆடியோ, பாடியே இந்த கதவை திறக்க முடியாது. எனவே, இந்த ஊழல் கோட்டையை உதைத்து திறக்க வேண்டும். எங்கள் கட்சிக்கு என்று ஒரு முறைமை இருக்கிறது, அது எங்கள் பேச்சிலும், அரசியலிலும் இருக்கும். எனவே, எங்களிடம் பழி வாங்கும் அரசியலோ, பழி போடும் அரசியலோ இல்லை; வழி காட்டும் அரசியல் இருக்கிறது. 

 


கொள்கை என்ற பெயரில் மக்களுக்கான நன்மையை செய்ய தவறுவது அல்ல. மக்களுக்கான நன்மையை எப்படியாவது செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். விழா முடிந்த உடன் இந்த இடத்தை தூய்மைபடுத்திவிட்டு செல்லுங்கள். இது நம்முடைய இடம் என்பதை எப்போதும் உணர்ந்து செயல்படுங்கள்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.