Skip to main content

இரண்டு இலையை இரண்டா பிரித்து, இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்... -கமல்ஹாசன்

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாண்டு நிறைவு விழா திருவாரூரில் நடந்தது. அப்போது அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியது...

 

kamal haasan




ஏன் திருவாரூரை தேர்ந்தெடுத்தீர்கள் அதுவும் முதலாண்டு நிறைவு விழாவை... ஏன் கொஞ்சம் இறங்கி அடிக்கிறாரு கமல்ஹாசன் அப்படினு பல பத்திரிகைகளில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இறங்கி இல்லைங்க மேடை ஏறிதான் அடிக்கிறேன். சரி ஏன் திருவாரூர்... திருவாரூர் பல பெரும் கலைஞர்களை கொடுத்திருக்கிறது தமிழகத்திற்கு, பல நல்ல தலைவர்களை கொடுத்திருக்கிறது. ஆனால் ஒரு ஊர் என்றால் அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். அதுவும் கொடுத்திருக்கு. முக்கியமாக வாரிசு அரசியல், குடும்ப அரசியலை கொடுத்து, கெடுத்திருக்கிறது, தமிழகத்தை. அதனால் திருவாரூர் என் மனதில் மையம் கொள்கிறது. இதை மாற்றவேண்டுமென்று தமிழக மக்களுக்கு இருக்கும் திண்ணமான எண்ணம்போல் என் மனதிலும் இருப்பதால், திருவாரூரை தேர்ந்தெடுத்தேன். என்னங்க இப்படி சொல்லிட்டிங்க உங்களுக்கும்தானே குடும்பம் இருக்கு நீங்கள் இப்படி பேசலாமா அப்படினு கேட்டால், இருக்கு எனக்கும் குடும்பம் இருக்கு. என் குடும்பத்துல எட்டு கோடி பேர். 
 

அப்படி சொல்ல முடியாதுங்க, எங்கள் கட்சியிலும் ஒருத்தர் குடும்ப அரசியல், வாரிசு அரசியல்லாம் செஞ்சிட்டுதானே போனாரு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அப்படினு சொல்லுவாங்க. சரி, ஒத்துக்குறேன். ஆனால் அவர் போட்ட இலையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எல்லோரும் என்பதை மறந்து விடாதீர்கள். அதுவும் இரண்டு இலையை இரண்டா பிரிச்சு, இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதுவேற இதுவேற. மக்களுக்கு எப்படி குழப்பம் இல்லையோ, அதுபோல எனக்கும் குழப்பம் இல்லை.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.