Skip to main content

பொன்ராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல்ஹாசன்..! (படங்கள்)

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி சென்னை முழுவதும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதே போல் இன்று (26.03.2021) அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் பொன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான கமல்ஹாசன் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி மார்க்கெட்டில் பிரச்சாரம் செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயர்மட்ட மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
The CM started the construction of the high-level flyover

சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.1.2024) அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கி.மீ நீளத்திற்கு கட்டப்படவுள்ள நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது.

மேலும் மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம். மேலும் கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இப்பாலம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The CM started the construction of the high-level flyover

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை துணை மேயர் மு. மகேஷ் குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.பிரதீப் யாதவ், தலைமை பொறியாளர் (சுட்டுமானம் மற்றும் பராமரிப்பு) திரு.ஆர்.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

தாமதமான ரோஸ் மில்க்; கடை ஊழியர் மீது கொடூரத் தாக்குதல்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Late rose milk; Brutal assault on shopkeeper

 

சென்னை அண்ணா நகரில் கடை ஒன்றில் ரோஸ் மில்க் கொண்டு வர கடை ஊழியர் தாமதம் செய்ததால் இளைஞர்கள் சிலர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் 'கோரா' என்ற காம்ப்ளக்ஸ் பகுதியில் நிறைய உணவகங்கள் உள்ளது. இதில் ரோஸ் மில்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடைக்கு வந்த இளைஞர்கள் சிலர் ரோஸ் மில்க் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் ரோஸ் மில்க் கொடுப்பதற்கு கடை ஊழியர்கள் தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் கடை ஊழியரை கொடூரமாகத் தாக்கினர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ரோஸ் மில்க் கடை உரிமையாளர் புகார் கொடுத்துள்ள நிலையில், சிசிடிவி காட்சி ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.