Skip to main content

கமல், ரஜினி இருவருக்குள்ளும் சிண்டு முடியும் பகல் கனவு பலிக்காது: நமது அம்மா நாளிதழுக்கு பொன்னுசாமி கண்டனம்

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

 

கமல், ரஜினி இருவருக்குள்ளும் சிண்டு முடியும் நமது அம்மா நாளிதழின் பகல் கனவு பலிக்காது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார். 

 

Kamal - Rajini


 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

"மக்கள் நீதி மய்யம்" தலைவர் கமல்ஹாசன் குறித்து ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், உதயகுமார், கடம்பூர் ராஜூ என அமைச்சர் பெருமக்கள் ஒவ்வொருவரும் நித்தமும் ஒரு விமர்சனத்தை முன் வைத்து தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வை ஊடகங்கள் முன் தொடர்ந்து பகிர்ந்து வரும் வேளையில் "தமிழகத்தின் நலனிற்காக கரம் கோர்க்க தயார்" என்று பரஸ்பரம் அறிவித்துள்ள கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் குறித்து "பதினாறு வயதும், பதராகும் பொழுதும்" என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு "ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டணியின் ஒட்டுமொத்த பயத்தை நமது அம்மா நாளிதழ் வெளிக் காட்டியுள்ளது."


 

மேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை வாய் மூடி அடிமை சாமரம் வீசிக் கொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் "மக்கள் நீதி மய்யம் கட்சி" பெற்ற கணிசமான வாக்குகளால் பித்துப்பிடித்துப் போய் "எதைத் தின்றால் பித்தம் தெளியும்...?" என தலைமுடியை பிய்த்துக் கொண்டு திரியும் வேளையில்  "தமிழகத்தின் நலனிற்காக கரம் கோர்க்க தயார்" என்று பரஸ்பரம் அறிவித்துள்ளபடி கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் வரும் தேர்தல்களில் ஊழல் சக்திகளை களைந்து, அவைகளை அடியோடு வேரறுக்க ஒன்று சேர்ந்து விட்டால் எங்கே தங்களின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடுமோ..? தங்களின் வருமானத்திற்கு தடங்கல் வந்து விடுமோ...? தமிழகத்தை பங்கு போடும் கனவு பொய்த்துப் போய் விடுமோ...? என்கிற அச்சத்தில், கலக்கத்தில் ஆளுங்கட்சியினர் இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அந்த அச்ச உணர்வே அமைச்சர் பெருமக்கள் போன்று அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான "நமது அம்மா" நாளிதளையும் உளறிக் கொட்ட வைத்துள்ளது.


 

அதுமட்டுமின்றி "ரஜினியோடு போட்டி போட்டு தோற்று விட்ட கமல், அவரை அரசியலில் தன்னோடு இணைத்து ரஜினியின் தனிச்செல்வாக்கை மறைத்து விட நரிக்கணக்கு போடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு, கமலோடு கரம் கோர்ப்பது, எலியும் பூனையும் இணைந்து குடித்தனம் நடத்தப் போகிறேன் என்பதற்குச் சமம், இதற்கு ரஜினியும் வலியச் சென்று பலிகடா ஆவேன் என்பது பரிதாபம் என தமிழக நலனிற்காக ஒன்று சேர தயார் என பரஸ்பரம் அறிவித்துள்ள அவர்கள் இருவருக்குள்ளும் சிண்டு முடிந்து விடும் பணியை, தனது குள்ளநரித்தனத்தை "நமது அம்மா நாளிதழ்" அந்த கட்டுரை வாயிலாக கனக்கச்சிதமாக செய்திருக்கிறது. சிண்டு முடிந்து அதன் மூலம் பலனை அனுபவிக்க துடிக்கும் அதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான அந்நாளிதழின் பகல் கனவும், சகுனி வேலையும் கண்டிப்பாக பலிக்கப்போவதில்லை. இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.