Skip to main content

‘கொம்புல பூவைச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு’ - சென்னையில் ஜல்லிக்கட்டு; கமல் முயற்சி

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

 

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7 aaம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து தற்போது உத்தரப்பிரதேசம் வந்தடைந்துள்ளது.

 

இந்திய ஒற்றுமைப் பயணத்திற்காக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டனர். 

 

இந்திய ஒற்றுமைப் பயணம் முடிந்த பின் தமிழகம் திரும்பிய பின் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஜனவரி 6 இல் விருந்து ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

கட்சியினர் உடனான கூட்டம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம். ஒரு குரல் கேட்டதும் அவர்கள் திரண்டு டெல்லிக்கு வந்தார்கள். பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார்கள். இது முதற்கட்ட நடவடிக்கை தான். பாரதத்தின் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்ட யாத்திரை இது. அதையும் சொல்லிவிட்டு அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் சொன்னோம். என் மனதில் உள்ள திட்டங்களில் ஒன்று சென்னையில் ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்து நடத்த வேண்டும் என்பது. அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்காக முயன்று வருகிறோம். மற்றபடி கட்சி சம்பந்தமான விஷயங்களை விவாதித்தோம். 

 

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடந்த இடத்திலேயே நடத்த முடியாது. அதில் சில சட்டச்சிக்கல்கள் உள்ளன. ஆனாலும் சென்னையில் நடத்த வேண்டும். நகரத்தில் உள்ளவர்களுக்கு அதன் அருமை தெரியவேண்டும் என்பது எங்கள் ஆசை.” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தின் ஒரு பகுதி” - வானதி சீனிவாசன்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Vanathi Srinivasan says Jallikattu is a part of Sanatana Dharma

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களில் பா.ஜ.க சார்பில் தூய்மை பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட்டம் கோனியம்மன் கோவிலை தூய்மைப்படுத்தும் பணியில் தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அதன் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அலங்காநல்லூர் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் கோவிலோடு தொடர்புடையது. இதனை எம்.பி. சு.வெங்கடேசன் மறுக்க முடியுமா?. கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு தான் காளையை அவிழ்த்து விடுவார்கள். அது தான் இந்த நாட்டின் மரபு, பண்பாடு எல்லாமே. அதாவது, திமுகவும், கம்யூனிஸ்டும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தின் உடைய அடையாளம், பண்பாடு, கலாச்சாரத்தை சீரழித்து அதை அவமானப்படுத்துவது தான் வேலையாக வைத்திருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டில் முதல் காளை சாமியோட காளை தான் முதலில் வெளியே வரும். அப்படியென்றால், கோவிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க நினைக்கிறார்களா?. ஜல்லிக்கட்டு என்பது இந்து கலாச்சாரத்தில் ஒரு கூறு. அதனால் தான் காளையை சாமியோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். பொங்கல் என்பதே சூரிய கடவுளைப் பார்த்து கும்பிடுவது தான். வேறு மதத்தில் கற்பூரம், ஆரத்தி எதுவும் காட்டுகிறார்களா?. இந்து மதத்தில் தான் கற்பூரம் காட்டி திருநீறு பூசுகிறோம். இது முட்டாள்தனமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது சனாதன தர்மத்தினுடைய ஒரு பகுதி. சனாதன தர்மம் மட்டும் தான் மனிதனை மட்டும் இங்கு இருக்கக்கூடிய மிருகத்தையும் சமமாக பார்க்க சொல்லிதரக்கூடிய ஒரு தர்மம்” என்று கூறினார்.

அப்போது அவரிடம், ‘அங்கே கோவில் வருவது எங்கள் பிரச்சனை கிடையாது. ஆனால், அங்கே இருந்த மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’  என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அந்த மசூதி கட்டப்பட்டதே கோவிலை இடித்து தான் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதனால், இடிக்கப்பட்ட இடத்தை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தான் நியாமாக இருக்கும். தமிழக முதல்வர் நேரில் கூட அழைப்பிதழை வாங்க மறுத்துவிட்டார். ஆனால், அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி நேரில் வருவதாக உறுதியளித்துள்ளார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மட்டுமல்ல அந்த இயக்கத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரையும் நாங்கள் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கிறோம். எப்படி, கிறிஸ்துவ கோவிலுக்கும், இஸ்லாமிய கோவிலுக்கும் சென்று அவர்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்கிறீர்களோ, அது போல் இந்த கோவிலுக்கும் வந்து ராம பக்தர்களுக்கு வாழ்த்து சொல்வது தான் அனைவருக்குமான நீதிக்கான அரசியலாக இருக்க முடியும். 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்ததின் உடைய அடுத்தக் கட்டம். இந்த நாட்டில் வருடம் முழுவதும் தேர்தல் நடத்துகின்ற பொழுது, அந்த மாநிலங்களில் எந்தவிதமான வளர்ச்சி பணியையும் மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமல்லாமல், மத்தியில் ஆளுகின்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் நேரம் எல்லாம் இதற்கு மட்டுமே செலவாகிறது. அதனால், சீர்திருத்தை நோக்கி உங்களுடைய கருத்துகளை சொல்லுங்கள். அதை விட்டு புறக்கணிப்பதோ அல்லது மறுப்பதோ சரியாக வராது” என்று கூறினார். 

Next Story

“ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்” - நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் பதில்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Su Venkatesan's reply to Nirmala Sitharaman

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று முன் தினம் (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றும் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தது. இன்று (17-01-24) காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

அந்த வகையில், மதுரை அவனியாபுரத்தில் நேற்று முன் தினமும் (15-01-24), பாலமேடு பகுதியில் நேற்றும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் பகுதியில் இன்று (17-01-24) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள் சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுடன் ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறுவிதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது” என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் காட்டமாக பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். ‘தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்’ என நிர்மலா சீதாராமன் கூறுகிறார். உலகம் அதிர உரக்கச்சொல்வோம்..கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்” என்று பதிவிட்டுள்ளார்.