Skip to main content

கமலுக்கு கொள்கை இல்லை... அவரை சக போட்டியாளராக நினைக்கவில்லை... சீமான் அதிரடி

Published on 14/04/2019 | Edited on 14/04/2019

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். 
 

கேள்வி: இந்த தேர்தலில் உங்களைப்போலவே மாற்று அரசியலை முன் வைக்கிறார் கமல்ஹாசன். அவருக்கும் உங்களுக்கும் இந்த தேர்தலில் போட்டி இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. அவரும் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம். இதுவரை ஆண்ட கட்சிகள் வேண்டாம் என்று சொல்லுகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?. 

 

Kamal-Haasan-Seeman



பதில்: அப்படி அவர் சொல்லவில்லை. அவர் முயற்சி செய்தார். ராகுலை பார்த்தார். இடது சாரிகளை கூப்பிட்டார். யாரும் வரவில்லை. சட்டசபை தேர்தல், அதற்கு பிறகு வரக்கூடிய தேர்தலில் என்ன முடிவு எடுப்பார் என்பதை யோசிக்கணும். அவருக்கு ஒரு வரைவு இல்லை. கொள்கை இல்லை. நான் தமிழன், என் இனம் தமிழினம், என் தேசம் தமிழ் தேசம், இங்கு வாழுகிற என் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, வேளாண்மையை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். என் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் மொழி செத்துவிட்டது. அதனை மீட்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு உரிமையான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் நிலத்தை நாசமாக்கும் நாசக்கார திட்டங்களை நுழையவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.





 

எனக்கென்று ஒரு கொள்கை முடிவு இருக்கிறது. அவருக்கு அது இல்லை. முதலில் அவர் எதையும் வரையறுக்கவில்லை. அவர் இந்தியரா. திராவிடரா. தமிழரா. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது ஒரு பாட்டு போடுகிறார். திராவிடர் என்றொரு இனம், அது பழம்பெரிய இனம்... அப்படியே கொஞ்சம் போய், தமிழனின் பெருமை தெரியுதடா... என்று வருகிறது. ஒன்று தமிழனின் பெருமையை பேச வேண்டும். இல்லை திராவிடர் பெருமையை பேச வேண்டும். எதையாவது ஒன்றை வரையறுக்க வேண்டும். நிறைய தடுமாற்றங்கள் இருக்கிறது. நான் அவரை சக போட்டியாளராக நினைக்கவில்லை. இவ்வாறு கூறினார். 


 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.