Skip to main content

கலைஞரின் குருகுலத்தில் வீதிகள் தோறும் புகழஞ்சலி.... 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் தமிழகத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று தமிழகம் முழுக்க தி.மு.க.வினரால் நடத்தப்படுகிறது. சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் முதன்மை நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று அவரது நினைவிடத்தில் புகழ் மாலை அணிவித்தனர். அதேபோல் தான் தமிழகம் முழுக்க அனைத்து ஊர்களிலும் கலைஞரின் சிலைகள் மற்றும் திருவுருவப் படங்களுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

கலைஞர் தொடக்கக் காலத்தில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றிய போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரோடு ஈரோட்டில் சில காலம் வாழ்ந்தார். தன் வாழ்நாள் முழுக்க ஈரோடு நகரத்தை எனது குருகுலம் என பெருமை பொங்க கூறுவார் கலைஞர். அப்படிப் புகழ் பெற்ற குருகுலமான ஈரோட்டில் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி திரும்பிய திசையெல்லாம் நிகழ்ந்தது. 

 

தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பு கலைஞரின் புகைப்படங்களை வைத்து மாலை அணிவித்தனர். அதே போல் ஒவ்வொரு வீதியின் முகப்பிலும் பெரிய படங்கள் வைக்கப்பட்டு மாலை சூடப்பட்டது. அங்கு பூக்களும் வைக்கப்பட்டிருந்தது. கட்சிக்கு சம்பந்தமில்லாத பொதுமக்கள், இளைஞர்கள், இளம் பெண்கள், வயதான பெண்கள் எனப் பலரும் கலைஞர் படத்திற்கு பூக்கள் தூவி சிலர் கண்ணீர் சிந்தியது உணர்ச்சிகரமாக இருந்தது. 

 

வாழ்க்கையில் எந்த நம்பிக்கையும் இல்லாது இருந்தபோது கடவுள் போல முதியோர் உதவித் தொகை நீங்கதானே ஐயா கொடுத்தீங்க என ஒரு வயதான பாட்டி வாய் விட்டு கூறி அழுததும், இன்று நான் அரசுப் பணியில் இருப்பதற்கு நீங்கள் வழங்கிய மூன்று சதவீதம் உள்ஒதுக்கீடு தாங்க ஐயா, எங்களுக்கு நீங்க தான்யா கடவுள் என ஒரு தலித் பெண் கண் கலங்கிய நிகழ்வுகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. 

 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ்குமார் முப்பது இடங்களில் கலைஞரின் படங்கள் வைத்து மலர் மாலை சூடியதோடு அப்பகுதி மக்களுக்கு கபசுர சித்த மருந்தும் நோய் எதிர்ப்பு சக்தி சித்த மருத்துவ மாத்திரைகளும் வழங்கினார்.

 

http://onelink.to/nknapp

 

தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப் பொன்னி மனோகரன், பொருளாள் ப.க.பழனிசாமி முன்னாள் மேயர் குமார் முருகேஷ் கவிஞர் ஈரோடு இறைவன் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஈரோடு முனிசிபல் காலனி மற்றும் வ.ஊ.சி. பூங்காவில் உள்ள கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் அதே போல் அங்கு இருந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்து வளர்ந்த வீடான பெரியார், அண்ணா நினைவகத்திற்குச் சென்று மூன்று தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.

 

ஈரோடு மாவட்டத்தில் குக்கிராமம் முதல்கொண்டு வீதிகளில் கலைஞரின் புகைப்படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகள் மக்கள் மனதில் கலைஞர் நீங்காத இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.