Skip to main content

“மோடி அரசு எவ்வளவு ஈவிரக்கமற்றது..” - ஜோதிமணி எம்.பி. ஆவேசம்..! 

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

Jothimani Condemn on 18 to 44 age group vaccine order


கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதேவேளையில், கட்டுபாடுகளுடன் தடுப்பூசி செலுத்திகொள்வதன் மூலமே கரோனா பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடமுடியும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. கரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்ததும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சில மாதங்களில் அந்த வயது வரம்பு 45 ஆக குறைக்கப்பட்டது. தற்போது அதன் வரம்பு 18 வயது என நிர்ணயக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்ததில், “18 முதல் 44 வயதுடையோர் அனைவரும் தனியார் கரோனா தடுப்பூசி மையங்களில் பணம் செலுத்தி தங்களுக்கான தடுப்பூசியை எடுத்துகொள்ளலாம். அதேபோல் அரசு மருத்துவமனைகளிலும் எடுத்துகொள்ளலாம். ஆனால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தங்கள் மாநிலத்தில் எந்த வயதில் இருந்து இலவச தடுப்பூசி என்பதை அந்தந்த அரசுகளே நிர்ணயத்துகொள்ள வேண்டும்” என்று எழுதியுள்ளார். 

 

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ளன. ஆனால், அப்படி அறிவிக்காத மாநிலங்களில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தின்படி 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் பணம் கொடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இதனைக் கண்டித்து கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர், “18-44 வயதுடையோர் தனியாரிடம்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மாநில அரசுகள் விரும்பினால் இலவச ஊசி போட்டுக் கொள்ளும் வயதை குறைத்துக்கொள்ளலாம் மோடி அரசு எவ்வளவு ஈவிரக்கமற்றது என்பதற்கு இந்த கரோனா கொள்ளை சாட்சி. இந்தியாவில் இதுவரை தடுப்பூசி  மத்திய அரசால் இலவசமாகவே போடப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.

Next Story

“நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்” - ஜோதிமணி தீவிர பிரச்சாரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Jothimani during campaign for Vote for Congress to save the country

கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் நாட்டை காப்பாற்ற வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கரூர் மாவட்டம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்றத் தொகுதி, ஆண்டா கோயில் மேல்பாகம் மற்றும் கீழ் பாகம் ஊராட்சிகளில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்ன ஆண்டாங்கோயில் ரோடு எஸ்பிஐ காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகை தந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பொதுமக்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பேசிய ஜோதிமணி, “தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கும் போது வாக்காளர்கள் ஒவ்வொரு பிரச்சனைகளையும் பார்த்து அதை தீர்க்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் இந்திய நாட்டை பத்து ஆண்டுகளாக ஆண்ட பாரதிய ஜனதா கட்சி பிடியிலிருந்து மீட்பதற்கு, வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அப்பொழுதுதான் நரேந்திர மோடி அரசு அகற்றப்படும். தமிழகத்தில் திமுக ஆதரவளிக்கும் ஒரு அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இம்முறை அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் எண்ணெய்  90 ரூபாய்க்கு விற்பனையானது, தற்பொழுது ரூபாய் 300-க்கும் விற்பனையாகிறது. ரூ. 410க்கு விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர் தற்பொழுது 1200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூபாய் 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததால் கல்விக் கடன் பெற்று, கல்வி பயின்ற இளைஞர்களை, வங்கிகள் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நரேந்திர மோடி அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் கல்விக்கடனை ரத்து செய்யாமல் ஏமாற்றிவிட்டது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்” என ஜோதிமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிபிஐ, சிபிஎம் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்