Skip to main content

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஜித்தன் ராம் மாஞ்சி!

Published on 28/02/2018 | Edited on 28/02/2018

பீகார் மாநில முன்னாள் முதல்வரும், இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா என்ற கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மாஞ்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

 

பீகார் மாநில முதல்வராக இருந்த ஜித்தன் ராம் மாஞ்சி, தற்போதைய முதல்வர் நிதீஷ்குமாரால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா என்ற கட்சியைத் தொடங்கினார்.

 

Manjhi

 

2015ஆம் ஆண்டு பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து தேர்தலைச் சந்தித்தார். அவரது கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.

 

ஜெகன்னாபாத் தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மாஞ்சி தன் மகனை போட்டியிட அனுமதிக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், பா.ஜ.க. தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் சார்பிலான ஆபிரகாம் சர்மாவை நிறுத்தவேண்டும் கூறியிருந்தது. 

 

மாஞ்சி தனது மகனை ஜெகன்னாபாத் தொகுதியில் போட்டியிட வைப்பதன் மூலம், அவரது அரசியல் எதிர்காலத்தை பலப்படுத்த எண்ணியிருந்தார். அது நடக்காத காரணத்தால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

 

இந்நிலையில், இன்று காலை லல்லு பிரசாத் யாதவ் வீட்டில் வைத்து மாஞ்சி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி, ‘மாஞ்சி எனது காப்பாளரைப் போன்றவர். ராஷ்திரிய ஜனதா தளம் கட்சியின் மெகா கூட்டணியில் அவருக்கான உரிய மரியாத வழங்கப்படும்’ என தெரிவித்தார்.

 

பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் காவ்கப் குதாரி, ‘இது மகிழ்ச்சியான தருணம். மாஞ்சி தாமதமாக எங்கள் மெகா கூட்டணிக்கு அவரை வரவேற்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறும் அவரது முடிவு மிக தாமதமானது என்றாலும், அது சிறந்த முடிவு. அவருக்கு உரிய மரியாதை வழங்குவோ’ என தெரிவித்திருக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.