Skip to main content

போலீஸ்காரர்களாக நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகள்...

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
jewellery

 

 

விழுப்புரம் அருகிலுள்ள சந்தான கோபாலபுரத்தை சேர்ந்தவர் 76 வயது லட்சுமி. இவர் நேற்று பிற்பகல் விழுப்புரம் நேரு வீதியில் மளிகை கடைக்கு சமையல் எண்ணெய் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி சிலை அருகே அவர் வந்தபோது மூன்று மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்துள்ளனர். 

 

தங்களை குற்றப்பிரிவு போலீசார் என்று அடையாள அட்டைகளை காண்பித்து அவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் திருடர்கள் சுற்றித் திரிவதாகவும் கழுத்தில் காதில் அணிந்துள்ள நகைகளை பாதுகாப்பாக கழற்றி ஒரு பையில் போட்டு எடுத்துச் செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளனர். 

 

அப்போது மூதாட்டிக்கு நகைகளை கழட்டி கையில் வைப்பதற்கு உதவி செய்வது போல ஒரு பையை கொடுத்து 5 பவுன் நகையை அதில் வைத்ததுபோல் போக்கு காட்டி திருடிச் சென்றுள்ளனர். லட்சுமி பாட்டி கடைக்கு சென்று பையை பார்த்தபோது பையில் வைத்த நகை மாயமானது தெரிந்தது அதிர்ச்சி அடைந்தார். போலீஸ் என கூறி நகையை அந்த ஆசாமிகள் மோசடி செய்து பரித்து சென்றுள்ளது தெரிய வந்தது.

 

இதுகுறித்து டவுன் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் போல நடித்து நகைகளை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் காந்திசிலை பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் நகரில் பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள், போலீசார் எனக்கூறி மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் நகரத்தின் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளை; சென்னையில் பரபரப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
avadi Jewelry incident Sensation in Chennai

துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு 4 மர்ம நபர்கள் காரில் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள்; கள்ளக்குறிச்சியில் துணிகரம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Robbery with metal detector; Venture in Kalakurichi

கள்ளக்குறிச்சியில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நூதன முறையில் எந்த பகுதியில் நகைகள் உள்ளது என கண்டறிந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள எஸ்.வி.பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருள்ஜோதி. அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களால் 67 சவரன் நகை மற்றும்  23 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், வளவனூர் பகுதியைச் சேர்ந்த மாரி என்பவர் அவருடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உதயா மற்றும் மாரி ஆகிய இருவரை கைது செய்த போலீசார், உருக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த கொள்ளை அடிக்கப்பட்ட 25 சவரன் தங்கத்தை கைப்பற்றினர். மேலும் 2 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தங்க நகை எங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி இவர்கள் கொள்ளையடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.