ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜெயங்கொண்டம் விருத்தாசலம் ரோடு காந்தி சிலை அருகில் பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கான மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் தலைமையேற்று, வட்டார காங்கிரஸ் தலைவர் செங்குட்டுவன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மனோகரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கர், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் அண்ணாதுரை மாவட்ட துணைத் தலைவர் வேலாயுதம் சேவாதளம் தலைவர் ஆதிமூலம் பெரியவளையம் எஸ்.கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் முடிவில் வட்டார தலைவர் அறிவழகன் நன்றியுரையாற்றினார்.
ADVERTISEMENT
Show comments