ADVERTISEMENT

ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்களை மன்னார்குடி மாபியா குமபல் அபகரித்தது... அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு...

04:54 PM Jan 20, 2020 | rajavel




ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் மன்னார்குடி மாபியா கும்பல் அபகரித்துவிட்டதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை அருகே கலவை பஸ் நிலையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது 100 நாட்கள் கூட நடத்த முடியாது என கூறிய நிலையில் 48 ஆண்டுகளாக வெற்றிக்கரமாக அதிமுக கட்சி செயல்பட்டு வருகிறது. இதில் 30 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் அதிமுக உள்ளது.

ADVERTISEMENT


கடந்த 1996 மற்றும் 2006ம் ஆண்டுகளில் நடந்த பொது தேர்தல்களில் அதிமுக தோல்விக்கு சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் செய்த தவறுதான் காரணம். இது கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் மன்னார்குடி மாபியா கும்பல் தன்னுடைய சொத்தாக ஆக்கிரமித்து கொண்டது. தற்போது ஜெயலலிதாவின் வீட்டையே தன்னுடைய வீடு என அவர்கள் நினைக்கின்றனர். இவ்வாறு பேசினார்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT