Skip to main content

இபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் பிரச்சாரம்; அதிமுக அனுமதிக்குமா? - டி.ஜெ பதில் 

Published on 05/02/2023 | Edited on 05/02/2023

 

Jayakumar has answered about AIADMK campaign in Erode by-election

 

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

 

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்ற ஆணைப்படி எல்லோருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடிதத்தில் கழகத்தின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அவரது இமெயில், வாட்ஸ் அப் மூலமும் ஸ்பீடு போஸ்ட் போன்றவற்றின் மூலமும் தலைமைக் கழகப் பணியாளர்கள் மூலமும் நேரடியாக கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி முழுமையான அளவு இந்தப் பணி செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கும் இந்த கடிதம் அனுப்பியாகிவிட்டது. அவர்கள் பரிந்துரைத்த வேட்பாளரை வாபஸ் பெறுவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. 

 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவும் உள்ளது. இடைத்தேர்தலை பொறுத்தவரை ஏழாம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள். அதற்குள் பாஜக அவர்களது நிலைப்பாட்டை அறிவிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலையை ஆதரிப்போம் என சொல்கிறார். உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது (இந்த தீர்ப்பு இடைத்தேர்தலுக்கு மட்டும்). அந்த வழிமுறையின்படி தான் அதிமுக எல்லோருக்கும் அந்த கடிதத்தை முறையாக அனுப்பியுள்ளது. உச்சநீதிமன்ற வழிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். 

 

ஓ.பன்னீர்செல்வம் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டால் அனுமதிப்பீர்களா என்று கேட்கின்றீர்கள். ஏழாம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாள்; நீங்கள் கேட்கும் விஷயங்களை எல்லாம் முடிவு செய்ய வேண்டியது கட்சி; நான் கிடையாது. பாஜக, அதிமுகவின் இருதரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று சொல்கிறது. கூட்டணியில் இருப்பதால் சில கருத்துக்களை சொல்லலாம். கருத்துக்களை சொல்லக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. கருத்துக்கள் சொல்வது என்பது வேறு தலையீடு என்பது வேறு. கருத்துக்களை சொல்லலாம் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் கட்சியின் விருப்பம்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.